ஜெ., விசாரணை ஆணையம் செயல் இழந்துவிட்டது : தினகரன் ஆதரவாளர்கள்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம் செயல் இழந்து விட்டதாக டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கோவை : ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம் செயல் இழந்து விட்டதாக டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். 

டிடிவி தினகரன் அணியின் சார்பில் கோவையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தினகரன் ஆதரவாளர்கள் புகழேந்தி மற்றும் நாஞ்சில் சம்பத் ஆகியோர் இன்று கோவை வந்தனர். காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் ஒட்டலில் இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, அவர்கள் கூறியதாவது :- கோவையில் காவல்துறை மூலம் அறிவிக்கப்படாத எமர்ஜென்ஸி இருப்பதைப் போல இருக்கின்றது. கூட்டம் நடத்துவதற்கு கூட காவல்துறை அனுமதி மறுக்கின்றது. உள்ளுர் அமைச்சர் வேலுமணியின் கைப்பாவையாக காவல்துறை செயல்படுகின்றது. 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவைக் கொன்றதற்கு ஆதாரம் இருப்பதாக சொன்ன மனோஜ் பாண்டியன், பி.எச்.பாண்டியன் ஆகியோரை ஏன் விசாரணை ஆணையம் அழைத்து விசாரிக்கவில்லை. அதேபோல, தர்மயுத்தம் நடத்திய ஓ. பன்னீர் செல்வத்தையும் ஏன் அழைத்து விசாரணை ஆணையம் விசாரிக்கவில்லை. மருத்துவமனைக்கே போகாத தீபா, மாதவன், கார் ஓட்டுநர் போன்றவர்களை அழைத்து விசாரணை ஆணையம் விசாரிக்கின்றது. ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்காக அமைக்கப்பட்ட ஆணையம் செயல் இழந்து விட்டது. 

.

நீட் தேர்விற்காக அ.தி.மு.க., எம்.பி.கள் போராட்டம் நடத்த வேண்டும். அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களில் ஒரு சிலரை தவிர வேறுயாரும் சசிகலா, தினகரன் குறித்து தவறாகப் பேசுவதில்லை. அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்ட சில அமைச்சர்கள் கூட இவர்களைத் தவறாக பேசுவதில்லை. விரைவில் மூன்றாவது முதலமைச்சரையும் சசிகலா தேர்வு செய்வார். எடப்பாடி பழனிச்சாமி, ஓ. பன்னீர்செல்வத்தின் ஆட்சி பிடிக்காததால், இயற்கை அவர்களுக்கு ஒத்துழைக்கவில்லை. கோவில்களில் தொடர்ந்து அசம்பாவிதம் ஏற்படுகின்றது.  

துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி இன்றைய ஆட்சியாளர்களைப் பார்த்து சொன்ன "இம்போடன்ட்" என்ற வார்த்தையை சொல்லிய விஷயத்திற்காக  குருமூர்த்திக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும். துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி., தினகரன் பாராட்டு விழா நடத்த அனுமதிக்காததால் கோபமாக இருக்கின்றோம். இவ்வாறு அவர்கள் கூறினர். 

Newsletter

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...