பழங்குடியினருக்கான குடியிருப்புகள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் - வனத்துறை அமைச்சர்

பழங்குடியினருக்கான குடியிருப்புகள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

நீலகிரி : பழங்குடியினருக்கான குடியிருப்புகள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். 



நீலகிரி மாவட்டத்தில் இன்று செய்தியாளர்களை அவர் கூறுகையில், " டான்டீ தொடர்பாக அரசு உயர் அதிகாரிகள், நீலகிரி மாவட்டத்தில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் மற்றும் ஊழியர்கள் ஆகியோரைக் கொண்ட ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. தொழிலாளர்களின் குடியிருப்பு பிரச்சினைகள் மற்றும் இதர பிரச்சினைகள் அனைத்தும் படிப்படியாக தீர்ப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

 

விரைவில், தொழிலாளர்களின் பிரச்சினைகள் தீர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். சேரம்பாடி தனியார் எஸ்டேட்டில் அயனிபாலா மரங்கள் வெட்ட மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது. இந்த மரங்கள் இயற்கையாக வளர்ந்தவை என்பதால், அந்த மரங்களை வெட்டத் தடை விதிக்கப்பட்டது. 

நீலகிரி மாவட்டத்தில் மனித விலங்கு மோதல் அதிகரித்துள்ளது. விலங்குகளால், மனிதர்களுக்கும், மனிதர்களால் விலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படாமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது விலங்குகள் தாக்கி, உயிரிழப்பவர்களுக்கு ரூ.4 லட்சம் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல், யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க அகழிகள் வெட்டப்படுகின்றன. கரடி, சிறுத்தைகள் ஊருக்குள் வராமல் தடுக்க கூண்டுகள் வைத்துப் பிடிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

Newsletter

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...