கோவை பாரதியார் பல்கலைகழகத்தில் இருந்து கட்டுக்கட்டாக ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு துறையினர் அள்ளிச்சென்றனர்

கோவை பாரதியார் பல்கலைகழகத்தில் நள்ளிரவு வரை சுமார் 9 மணி நேரம் நடைபெற்ற ஆய்வின் முடிவில் கட்டுக்கட்டாக ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு துறையினர் அள்ளிச்சென்ற சம்பவம் பரபரப்பைஅதிகப்படுத்தியுள்ளது.

கோவை: கோவை பாரதியார் பல்கலைகழகத்தில் நள்ளிரவு வரை சுமார் 9 மணி நேரம் நடைபெற்ற ஆய்வின் முடிவில் கட்டுக்கட்டாக ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு துறையினர் அள்ளிச்சென்ற சம்பவம் பரபரப்பைஅதிகப்படுத்தியுள்ளது.

கோவை பாரதியார் பல்கலைகழகத்தில் லஞ்சம் வாங்கியதாக துணைவேந்தர் கணபதி, பேராசிரியர் தர்மராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தொலைதூர கல்வி இயக்குனர் மதிவாணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று கூடிய ஆட்சி மன்ற குழுவினர் பேராசிரியர் தர்மராஜை பணியிடை நீக்கம் செய்தனர்.

மேலும் பல்கலைகழகத்தின் செயல்பாடுகளை தடையின்றி மேற்கொள்ள மூன்று பேர் கொண்ட நிர்வாக குழுவினை ஏற்படுத்தினர். இன்று கூடிய இந்த நிர்வாக குழு தொலைதூர கல்வி இயக்குனர் மதிவாணனை பணியில் இருந்து விடுவித்ததுடன், அந்த பணிக்கு பல்கலைகழக புள்ளியல் துறை பேராசிரியர் சுரேஷ் நியமிக்கப்பட்டார். 

இதனிடையே லஞ்ச ஓழிப்புதுறை டி.எஸ்.பி தட்சிணாமூர்த்தி, டி.எஸ்.பி ராஜேஷ் ஆகியோர் இன்று மாலை 4 மணிக்கு துணைவேந்தர் கணபதியின் நேர்முக உதவியாளர் சுல்தான் பேகம், பதிவாளர் வனிதாவின் நேர்முக உதவியாளர்கள் ராஜன், சங்கர் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர். 

மாலை 4 மணிக்கு துவங்கிய விசாரணை நள்ளிரவு தாண்டி இரவு ஒரு மணி வரையில் நீண்டது. 2016-ம் ஆண்டு போடப்பட்ட பணிநியமனங்கள் தொடர்பாக இந்த விசாரணை நடைபெற்றதாக கூறப்படுகின்றது. பணிநியமனங்கள் தொடர்பான தகவல்களையும் , ஆவணங்களையும் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சேகரித்தனர். 

துணைவேந்தரின் நேர்முக உதவியாளர் சுல்தானா பேகம் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக துணைவேந்தர்களிடம் நேர்முக உதவியாளராக பணிபுரிந்து வருகின்றார். 5 துணைவேந்தர்களின் காலங்களில் பணிபுரிந்தவர் என்பதால், சுல்தானா பேகத்திடம் விசாரணை மேற்கொண்டால் பல முக்கிய தகவல்கள் மற்றும் ஆவணங்களை பெற முடியும் என்பதால் அவரிடமும், பதிவாளர் வனிதாவின் உதவியாளர்களிடம் விசாரணையானது நடத்தப்பட்டது. 

நேற்றைய தினம் பல்கலையில் விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சில ஆவணங்களை பெற்று சென்ற நிலையில், இன்றும் சில முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகின்றது. பல்கலைகழக அலுவலக ஊழியர்கள் பணி முடிந்து வெளியேறிய நிலையில் லஞ்ச ஒழிப்பு துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். 

இதையடுத்து நள்ளிரவு ஒரு மணியளவில் கட்டுக்கட்டாக ஆவணங்களை கார் மூலம் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அள்ளிச்சென்றனர். இன்று (09.02.2018) துணை வேந்தரை விசாரணைக்காக போலீஸ் காவல் கோரும் மனு விசாரணைக்கு வர உள்ள நிலையில் கட்டுக்கட்டாக ஆவணங்களை போலீசார் அள்ளிசென்றுள்ள சம்பவத்தால் துணை வேந்தர் கைது செய்யப்பட்டுள்ள விவகாரத்தில் பரபரப்பு அதிகரித்துள்ளது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...