முன்னாள் துணைவேந்தர் கணபதியின் உதவியாளர் அறையிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கணபதியின் உதவியாளர் சுல்தான் பேகத்தின் அறையிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

கோவை: பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கணபதியின் உதவியாளர் சுல்தான் பேகத்தின் அறையிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 

பேராசிரியர் நியமனத்துக்கு ரூ.30 லட்சம் லஞ்சமாகக் கேட்டதாக சுரேஷ் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கணபதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு. அவர் பணம் பெறுவதற்கு புரோக்கர் போல் செயல்பட்டதாக பல்கலைக்கழக வேதியியல் துறை பேராசிரியர் தர்மராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் கணபதியின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தியபோது தடயங்களை அழிக்க முயன்றதாக அவரது மனைவி சொர்ணலதாவும், அவரது உறவினரும், பல்கலைக்கழக ஊழியருமான மதிவாணன் ஆகியோர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

இதனிடையே, ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி மற்றும் பேராசிரியர் தர்மராஜ்ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களிடம் அதிகாரிகள் ஒருபுறம் விசாரணை நடத்தி வரும் நிலையில், பாரதியார் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது. லஞ்ச புகாரில் தொடர்பிருக்கும் என சந்தேகிக்கப்படும் அதிகாரிகளின் அறைகளில் நேற்று 7-வது நாளாக சோதனை நடத்தப்பட்டது. 

இந்த நிலையில், முன்னாள் துணைவேந்தர் கணபதியின் உதவியாளர் சுல்தான் பேகத்தின் அறையிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையையொட்டி, அங்கு போலீஸாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து, 8-வது நாளாக பாரதியார் பல்கலைக்கழகம் சோதனைக்குட்படுத்தப்படுவதால், அங்கு பரபரப்பு நிலவி வருகிறது. 

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...