பாரதியார் பல்கலைக்கழகத்தை நிர்வகிக்க 3 பேர் கொண்ட தற்காலிக குழு நியமனம்

துணைவேந்தர் கணபதி லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது செய்யப்பட்ட நிலையில், பாரதியார் பல்கலைக்கழகத்தை நிர்வகிக்க முதன்மைச் செயலாளர் சுனில் பாலிவால் தலைமையில் 3 பேர் கொண்ட தற்காலிகக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

கோவை: துணைவேந்தர் கணபதி லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது செய்யப்பட்ட நிலையில், பாரதியார் பல்கலைக்கழகத்தை நிர்வகிக்க முதன்மைச் செயலாளர் சுனில் பாலிவால் தலைமையில் 3 பேர் கொண்ட தற்காலிகக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. 



பேராசிரியர் நியமனத்துக்கு ரூ.30 லட்சம் லஞ்சமாகக் கேட்டதாக சுரேஷ் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கணபதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு. அவர் பணம் பெறுவதற்கு புரோக்கர் போல் செயல்பட்டதாக பல்கலைக்கழக வேதியியல் துறை பேராசிரியர் தர்மராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் கணபதியின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தியபோது தடயங்களை அழிக்க முயன்றதாக அவரது மனைவி சொர்ணலதாவும், அவரது உறவினரும், பல்கலைக்கழக ஊழியருமான மதிவாணன் ஆகியோர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

இதனிடையே, ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதியை பணியிடை நீக்கம் செய்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து உயர்கல்வித் துறை செயலர் தலைமையில் ஆட்சிமன்றக் குழு கூட்டம் பாரதியார் பல்கலைக்கழகத்தில் இன்று கூடியது. இதில், பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. குறிப்பாக, பல்கலைக் கழகத்தை நிர்வகிக்க முதன்மைச் செயலாளர் சுனில் பாலிவால் தலைமையில் 3 பேர் கொண்ட தற்காலிகக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் சிண்டிகேட் உறுப்பினர்களான பேராசிரியர்கள் ஜெயக்குமார், திருநாவுக்கரசு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 

கூட்டத்திற்குப் பிறகு முதன்மைச் செயலாளர் சுனில் பாலிவால் செய்தியாளர்களிடம் பேசுகையில், துணை வேந்தர் விவகாரத்தில் சி.பி.ஐ., விசாரணை தேவையில்லை. லஞ்ச ஒழிப்பு துறையின் நடவடிக்கையே திருப்திகரமாக உள்ளது. துணைவேந்தர்களின் முறைகேடுகளை தடுக்கும் வகையில் மற்ற மாநிலங்களில் பின்பற்றப்படும் முறைகளை கருத்தில் கொண்டு பரிசீலனை செய்ய வேண்டும். துணைவேந்தர் முறைகேடுகளை தடுக்க மேல்மட்டத்தில் இருந்தே சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். துணைவேந்தர் நியமனத்தில் அரசு மற்றும் அமைச்சர் தலையீடு இல்லை. 

பாரதியார் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து நியமிக்கப்படும் துணைவேந்தர்கள் மீது முறைகேடு புகார்கள் எழுகின்றன. அந்தப் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு தயக்கம் காட்டியதில்லை. பல்கலைக்கழகங்களில் தணிக்கை தடைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கணபதியைத் தொடர்ந்து, லஞ்சம் பெற்ற வழக்கில் சிக்கியுள்ள பேராசிரியர் தர்மராஜ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அடுத்த துணைவேந்தர் நியமிக்கப்படும் வரை இன்று தேர்வு செய்யப்பட்ட தனது தலைமையிலான நிர்வாக குழு பல்கலைக்கழகத்தை நிர்வகிக்கும். எனது தலைமையிலான அந்தக் குழுவில் பேராசிரியர்கள் ஜெயக்குமார், திருநாவுக்கரசு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்தக் குழு நிர்வாக குழுவாக செயல்படுவர். துணைவேந்தருக்கான அதிகாரங்கள் இந்தக் குழுவிற்கு கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...