அறிவிப்பு பலகையில் இருந்து தமிழை நீக்கவில்லை - சென்னை விமான நிலைய இயக்குநர்

சென்னை விமான நிலைய அறிவிப்பு பலகையில் இருந்து தமிழ் மொழியை நீக்கவில்லை என்றும் கோளாறு காரணமாகவே ஆங்கில மொழியில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டதாகவும் அந்த விமான நிலையத்தின் இயக்குநர் சந்திரமவுளி தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலைய அறிவிப்பு பலகையில் இருந்து தமிழ் மொழியை நீக்கவில்லை என்றும் கோளாறு காரணமாகவே ஆங்கில மொழியில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டதாகவும் அந்த விமான நிலையத்தின் இயக்குநர் சந்திரமவுளி தெரிவித்துள்ளார். 

சென்னை விமான நிலையத்தில் விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு தொடர்பாகத் தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் அறிவிப்பு வெளியாகி வந்த நிலையில், இன்று வழக்கத்திற்கு மாறாக ஆங்கில மொழியில் மட்டும் அறிவிப்பு வெளியாகியது. மேலும், தமிழ் மொழியில் இனி அறிவிப்புகள் வெளியிடப்பட மாட்டாது என்று விமான நிலைய அதிகாரிகள் அறிவித்தது போன்றும் செய்திகள் வெளியாகின. இது தமிழார்வலர்களிடையே மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தியது. 

இந்த சூழலில், " இன்று காலையில் அதிகமான விமானங்கள் இயக்கப்பட்டதால், சென்னை விமான நிலைய பெயர்ப்பலகையில், ஆங்கிலத்தில் மட்டும் அறிவிப்பு வெளியானது. மேலும் டிஜிட்டல் அறிவிப்புப் பலகையில் கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாகத்தான் இன்று காலை இந்தப் பிரச்சினை ஏற்பட்டது. தற்போது, அது சரிசெய்யப்பட்டுவிட்டது" என்று சென்னை விமான நிலையத்தின் இயக்கினர் சந்திரமவுளி தெரிவித்துள்ளார். 

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...