முன்னாள் மத்திய அமைச்சர் வீட்டில் சி.பி.ஐ., ஆவணங்கள்: அதிர்ச்சி தகவல்

ஏர்செல் மேக்ஸிஸ் ஊழல் தொடர்பான சி.பி.ஐ.,யின் ரகசிய ஆவணம் முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் வீட்டில் சிக்கியதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

ஏர்செல் மேக்ஸிஸ் ஊழல் தொடர்பான சி.பி.ஐ.,யின் ரகசிய ஆவணம் முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் வீட்டில் சிக்கியதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. 

பல கோடிகள் அரசுக்கு இழப்பு ஏற்படுத்திய ஏர்செல் மேக்ஸிஸ் ஊழல் வழக்கில் பல்வேறு விசாரணைகள் நடந்து வருகிறது. உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், கடந்த ஜனவரி 13-ம் தேதி சிதம்பரம் வீடுகளில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். இந்த விசாரணையில் எவ்வித ஆவணங்களும் எடுத்துச் செல்லப்படவில்லை என சிதம்பரம் கூறியிருந்தார். 

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ., நிலவர அறிக்கையின் நகல் சிதம்பரம் வீட்டில் இருந்ததாக தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த அறிக்கை கடந்த 2013ல் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதாகும். இது சீலிடப்பட்ட கவரில் உச்சநீதிமன்றத்தில் வழங்கப்படும். இவ்வாறான ரகசிய ஆய்வறிக்கை சிதம்பரம் வீட்டுக்கு எப்படி சென்றது என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக, சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. 

ஏர்செல் - மேக்ஸிஸ் ஊழல் வழக்கில் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திற்குத் தொடர்பிருப்பதாக வழக்கு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...