தாராபுரத்தில் வெறிநாய்கள் கடித்து 7 ஆடுகள் பலி: தொடரும் இதுபோன்ற சம்பவங்களை தடுக்க தவறும் நகராட்சி நிர்வாகம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் வெறிநாய்கள் கடித்து குதறியதால் 7 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. வெறிநாய்களால் தொடரும் இதுபோன்ற சம்பவங்களை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் வெறிநாய்கள் கடித்து குதறியதால் 7 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. வெறிநாய்களால் தொடரும் இதுபோன்ற சம்பவங்களை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தாராபுரம் பகுதியில் இரச்சிமஸ்தான் நகரில் வசித்து வரும் பொன்னுசாமி, காளியம்மாள் தம்பதியினர் ஆடுகள் மேய்த்து தங்களது வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர். இன்று அதிகாலையில் நாய்கள் குறைக்கும் சத்தம்கேட்டு ஆட்டு கொட்டகைக்கு காளியம்மாள் சென்று பார்த்தபோது ஏழு ஆடுகள் வெறிநாய்கள் கடித்து குதறி இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும், பல ஆடுகள் ஆட்டு கொட்டகையிலிருந்து நாய்களுக்குப் பயந்து சிதறி ஓடியுள்ளன. காணாமல் போன ஆடுகளை அவர்கள் தேடி வருகின்றனர்.



கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெறிநாய்கடித்து 5-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றனர். நேற்று தாராபுரம் கோவில்பாளையத்தில் வெறிநாய்கள் கடித்து 16 ஆடுகள் பலியானது. இந்த நிலையில், இன்று இரச்சிமஸ்தான் நகரில் 7 ஆடுகள் வெறிநாய்களால் கொல்லப்பட்ட சம்பவம் விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



தாராபுரம் மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில் நாய்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நகராட்சி மற்றும் வருவாய் நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டி வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டாக உள்ளது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...