பறிமுதல் செய்யப்படும் வாகனங்களில் இருந்து பொருட்களை கொள்ளையடிக்கும் மர்மகும்பல்

சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுவதாக போலீஸார் பறிமுதல் செய்யும் வாகனங்களில் இருந்த பொருட்களை மர்ம கும்பல் கொள்ளையடித்து செல்லும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை : சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுவதாக  உணவு கடத்தல் தடுப்பு பிரிவினரால்  பறிமுதல் செய்யும் வாகனங்களில் இருந்த பொருட்களை மர்ம கும்பல் கொள்ளையடித்து செல்லும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 



ரேசன் அரசி கடத்தலில் ஈடுபடுபவர்களைக் கைது செய்து வழக்குப்பதிவு செய்யும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவினர், கடத்தலுக்குப் பயன்படுத்தப்படும் வாகனங்களைப் பறிமுதல் செய்வது வழக்கம். அவ்வாறு பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை வழக்கு முடியும் வரை நிறுத்தி வைக்கப்படும். பல வாகன உரிமையாளர் பறிமுதல் செய்யபட்ட வாகனங்களை திருப்பி எடுப்பதில்லை. குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அந்த வாகனங்களை ஏலம் விடப்படுகிறது. அரிசி கடத்தலில் ஈடுபட்ட ஏராளமான வாகனங்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு எடுத்து செல்லப்பட்டு ஏலம் விடப்பட்டது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அரிசி கடத்தலில் ஈடுபட்ட மாருதி வேன் (KL.8.V.5364) பதிவு எண் கொண்ட வாகனத்தைப் பறிமுதல் செய்த உணவு கடத்தல் தடுப்பு பிரிவினர், அதனைக் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் தொடர்பு அலுவலகம் அருகே வாகனத்தை நிறுத்தி வைத்திருந்தனர். இந்நிலையில், இன்று காலை அந்த வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த ஒலி எழுப்பானை (ஹார்ன்) மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். 

இதேபோல, பல வருடங்களுக்கு முன்பு கைப்பற்றப்பட்ட கார் ஒன்றில் இருந்து டயர் திருடப்பட்டதாகப் புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது. 

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் கூறும்போது, காலையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் இருவர் அங்கு நடமாடி வந்தனர். அதற்கு, முன்னதாக, வேனில் ஒலி எழுப்பான் இருந்ததைக் கண்டேன். கருவூலதிற்கு வந்தவர்களாக இருக்கலாம் என்பதால், அங்கிருந்து சென்று விட்டனர். மாலையில், தன்னுடைய வாகனத்தை எடுக்க வந்தபோது கதவுகள் திறக்கப்பட்ட நிலையில், ஒலி எழுப்பானை திருடி சென்றது தெரிய வந்தது. என்றார்.

பல்வேறு துறைகளை சேர்ந்த ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பணியாற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாகனங்களுக்குப் பாதுகாப்பற்ற சூழலே நிலவுவதாக ஊழியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...