விவசாயிகளுக்குக் கடன் தேவையில்லை...! விளைபொருளுக்கான விலை நிர்ணயம் மட்டுமே தேவை..!

மத்திய அரசு அறிவித்துள்ள விவசாயிகளுக்கான 11 லட்சம் கோடி கடன் தேவையில்லை என்றும், விளைபொருளுக்கான விலை நிர்ணயம் தான் தேவை என உழவர் உழைப்பாளர் கட்சியின் தலைவர் செல்லமுத்து தெரிவித்துள்ளார்.

திருப்பூர்: மத்திய அரசு அறிவித்துள்ள விவசாயிகளுக்கான 11 லட்சம் கோடி கடன் தேவையில்லை என்றும், விளைபொருளுக்கான விலை நிர்ணயம் தான் தேவை என உழவர் உழைப்பாளர் கட்சியின் தலைவர் செல்லமுத்து தெரிவித்துள்ளார். 



பல்லடத்தை அடுத்த காரணம்பேட்டையில் உழவர் உழைப்பாளர் கட்சியின் சார்பில் உழவர் தலைவர் நாராயணசாமி அய்யாவின் 94-வது பிறந்தநாள் விழா மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கட்சியின் கொடியினை ஏற்றி நாராயணசாமி அய்யாவின் திருவுருவப் படத்திற்கு கட்சியின் தலைவர் செல்லமுத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. 

கூட்டத்தில், நடப்பு ஆண்டிலும் பருவமழை பொய்த்து வரலாறு காணாத வறட்சி நிலவுவதால் உடனடியாக விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணமும் பயிர் பாதுகாப்பு தொகையும் வழங்க வேண்டும், அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும், கொப்பரை தேங்காய் கிலோ ஒன்றுக்கு 150-ம், நெல் குவிண்டாலுக்கு ரூ. 2,500-ம், கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,000-ம் நிர்ணயம் செய்யப்பட வேண்டும், திருப்பூர் மாவட்டத்தின் உயிர் நாடியான பி.ஏ.பி திட்டத்தில் ஆனைமலையாறு, நல்லாறு திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் என்பது போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதனைத்தொடர்ந்து, பத்திரிக்கையாளர்களிடம் உழவர் உழைப்பாளர் கட்சியின் தலைவர் செல்லமுத்து பேசுகையில், விவசாயிகளுக்கான வருமானத்தை இரண்டு மடங்காகப் பெருக்குவோம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. எப்படி பெருக்குவார்கள் என பார்த்தால் விவசாயிகளுக்குக் கடன் தொகையை அறிவித்துள்ளார்கள். இவர்கள் அறிவித்துள்ள ரூ. 11 லட்சம் கோடி கடன் என்பது மீண்டும் விவசாயிகளைக் கடனாளியாகத்தான் மாற்றும். எனவே, மத்திய அரசு அறிவித்துள்ள கடன் தேவையில்லை. விளை பொருளுக்கான விலையை நிர்ணயம் செய்தால் விவசாயிகள் அனைவரும் கடன் இல்லாமல் வாழலாம். இவ்வாறு கூறினார்.

இந்தச் செயற்குழு கூட்டத்தில் பொருளாளர் பாலசுப்பிரமணி, மாநில மகளிரனி தலைவி ராஜரீகா மற்றும் திருப்பூர், கோவை மாவட்ட நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...