ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் செயலாளர் மாற்றம்

ஜெயலலிதா மரண விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையத்தின் செயலாளர் மாற்றப்பட்டுள்ளார்.

ஜெயலலிதா மரண விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையத்தின் செயலாளர் மாற்றப்பட்டுள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக வந்த தகவலையடுத்து தமிழக சார்பில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம் தனது விசாரணையைக் கடந்த நவம்பர் மாதம் தொடங்கியது. ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த சசிகலாவுக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. எனினும் தன் மீது புகார் கொடுத்தவர்கள் யார், இதுவரை விசாரணை நடத்தியவர்களிடம் தங்கள் தரப்பு விசாரணை நடத்த வேண்டும் என்ற இரு கோரிக்கைகளை சசி தரப்பு முன் வைத்தது. அதனடிப்படையில், சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்துவதற்கு ஏதுவாக, கடந்த ஜனவரி 31-ம் தேதி முதல் பிப்ரவரி 11-ம் தேதி வரைக்கு ஆணையம் தனது விசாரணையை ஒத்தி வைத்தது. 

பின்னர், வரும் 12-ஆம் தேதி ஆறுமுகசாமி தனது விசாரணையை மீண்டும் தொடங்குவார். அன்றைய தினம் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் ஐயப்ப னுக்கும், பிப்.15-ஆம் தேதி சசிகலாவின் உதவியாளர் கார்த்திகேயனுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் செயலாளராக இருந்த பன்னீர்செல்வம் மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதில், புது செயலராக கோமளா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...