புகழ்பெற்ற பூச்சு காளை ”புல்லிபாய்” இயற்கை எய்தியது

வயது முதிர்ச்சியால் புகழ்பெற்ற பூச்சுகாளை எனப்படும் ”புல்லிபாய்” காளை இயற்கை எய்தியது.

வயது முதிர்ச்சியால் புகழ்பெற்ற பூச்சுகாளை எனப்படும் ”புல்லிபாய்”  காளை இயற்கை எய்தியது. 



1998-ல் பிறந்து 2001-ல் இருந்து பூச்சு காளையாக செயல்பட்ட புல்லிபாய், சேனாபதி காங்கயம் கால்நடை ஆராய்ச்சி மையத்தின் பொக்கிஷமாக திகழ்ந்தது. உலகத்தில் அதிகமாக படம் பிடிக்கப்பட்ட காளை புல்லிபாய் (#bullyboy). வயது முதிர்ச்சியின் காரணமாக, இந்த மண்ணை விட்டு பிரிந்த புல்லிபாயின் மறைவிற்கு ஜல்லிக்கட்டு பிரியர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். விரைவில், புல்லிபாய் காளைக்கு நினைவுச்சின்னமும், அருங்காட்சியமும் ஏற்படுத்தப்படும். 



உன் உடல் அழகில் இனி கிடைப்பது மிகமிக அரிது... நீ ஒரு தனிப்பிறவி... நீ வாழ்ந்த காலம் ஒரு பொற்காலம்... நீ வாழ்ந்த இடமும் ஒரு அரசனிடம், உன் பெருமை என்றும் மறையாது..      

காங்கேய வாம்சத்தின் கட்டழகு சிம்மமே

இளைஞரின் மனத்தினிலே இளைக்காத தங்கமே

ஈடில்லா அழகோடு இதயத்தில் வாழ்ந்தாலும்

இமயத்தின் உயரத்தை இன்புகழால் உடைத்தாலும்

மரணத்தின் வாயிலிலே மனம்நொறுங்க செய்தாயே

எத்தனையோ படைப்புக்கள் என்மனத்தில் உதித்தாலும்

அத்தனைக்கும் தகப்பனாய் ஆண்மகனே நீயிருக்க

நெஞ்சத்தின் நினைவுகளோ நொடியினில் உடைந்ததுவே

கம்பீர நடையிட்டு காடெல்லாம் நீடக்க

காண்போரின் கண்களும் கனப்பொழுதில் விரிந்திடுமே

மீண்டும் காண்பேனோ, மீளாத உன்நடையை

திமிலின் சிறப்பினிலே, திக்கெட்டும் ஆண்டவனே

திரும்ப காண்பேனே, திகட்டாத நின்அழகை

வையத்தின் பரப்பினிலே, வானவில்லாய் திரிந்தவனே

உயரிய கொம்புகளை உயர்த்தியே நீநடக்க

காதலித்த பூமிமகள் கரம்கொண்டு அணைத்தாளோ

இருபது அகவையிலே இடம்விட்டு மறித்தவனே

மண்ணின் மடியினிலே மாசின்றி நீயுறங்க

மானிட மனத்தினிலே மன்னனாய் வாழ்ந்திடுவாய்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...