மானிய விலை இருசக்கர வாகனத்திற்கு விண்ணப்பிக்கக் கடைசி நாளில் அலைமோதிய கூட்டம்

மானிய விலையில் இரு சக்கர வாகனத்தைப் பெற பதிவு செய்வதற்கான கடைசி நாளான இன்று கோவையில் பெண்கள் கூட்டம் அலைமோதியது.

கோவை: மானிய விலையில் இரு சக்கர வாகனத்தைப் பெற பதிவு செய்வதற்கான கடைசி நாளான இன்று கோவையில் பெண்கள் கூட்டம் அலைமோதியது. 

தமிழக அரசு அறிவித்துள்ள மானிய விலையில் அம்மா இரு சக்கர வாகன திட்டம், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளான பிப்ரவரி 24 ம் தேதி துவங்கப்பட உள்ளது. 

இதனை, சுய தொழில் செய்யும் பெண்கள், அமைப்பு சாரா நிறுவனங்களில் பதிவு பெற்ற பெண்கள், வர்த்தக நிறுவனங்களில் பணி புரிவோர் உள்ளிட்ட 18 முதல் 40 வயது வரையிலான பெண்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது. 

இதற்கான விண்ணப்பங்கள் கடந்த ஜனவரி 22-ம் தேதி முதல் வழங்கப்பட்டு வந்தன. விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க கடைசி நாளான இன்று மாநகராட்சியின் மண்டல அலுவலகங்களில் பெண்கள் கூட்டம் அலைமோதியது. காலை முதல் ஏராளமான பெண்கள் நீண்ட வரிசையில் நின்று விண்ணப்பங்கள் மற்றும் ஆவணங்களைச் சமர்ப்பித்தனர். 

இத்திட்டத்தின் படி இரு சக்கர வாகன பெற தகுதி பெறுபவர்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வாங்க 25 ஆயிரம் ரூபாய் அல்லது வாகன விலையில் 50 சதவீதம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...