தள்ளுவண்டிக் கடை நடத்த அனுமதி தாருங்கள்..! - குடிசை மாற்று வாரிய குடியிருப்பு வாசிகள்

தள்ளுவண்டிக் கடைகள் அமைக்க அனுமதி கோரி வெள்ளலூர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசிக்கும் பொதுமக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


கோவை: தள்ளுவண்டிக் கடைகள் அமைக்க அனுமதி கோரி வெள்ளலூர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசிக்கும் பொதுமக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் கோவை வெள்ளலூர் பகுதியில் வீடுகள் கட்டப்பட்டு பல்வேறு பகுதிகள் வசித்த வந்த பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. அந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள 2800 வீடுகளில் சுமார் 2000 வீடுகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். 



குடிசை மாற்று வாரியத்தால் வீடு ஒதுக்கப்பட்டவர்களில் சிலர் தள்ளுவண்டி கடை அமைக்க அனுமதி கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்று அளித்தனர். 

தொடர்ந்து அவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வணிகத்திற்கு கடைகள் கட்டப்பட்டுள்ளது. அந்த கடைகளுக்கு ரூ.2500 என அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட ரூ. 5 ஆயிரம் முதல் ரூ.18 ஆயிரம் வரை வாடகைக்குத் தனியார் பெற்றுள்ளனர். இந்த குடியிருப்பில் வசிக்கும் பலர் தள்ளுவண்டிக் கடை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். ஆனால், வணிக வளாகங்களில் கடைகளை வாடகைக்கு எடுத்த சிலர் தள்ளுவண்டிக் கடைகள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது குறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தால் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், கடைகள் அமைத்துள்ள வியாபாரிகளுக்குச் சாதகமாக பேசுகின்றனர். இங்கு வசிப்பவர்கள் ஏழ்மையான நிலையில் உள்ளதால் வெள்ளலூர் குடிசை மாற்று வாரியத்தில் தள்ளுவண்டி வியாபாரம் நடத்த அனுமதி அளிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என்றனர். 

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...