வேளாண்துறையில் ஒப்பந்த அடிப்படையில் வேலைவாய்ப்பு

கோவை வேளாண்மைத் துறையில் ஒப்பந்த அடிப்படியில் ஊழியர்களைத் தேர்வு செய்து வழங்க பணி நியமன முகமைகள் வரவேற்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

கோவை: கோவை வேளாண்மைத் துறையில் ஒப்பந்த அடிப்படியில் ஊழியர்களைத் தேர்வு செய்து வழங்க பணி நியமன முகமைகள் வரவேற்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டதாவது :- 

கோயம்புத்தூர் மாவட்டத்தில் வேளாண் திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்தப் பணியினை இணையதளம் மூலம் பதிவு செய்யத் தகுதி வாய்ந்த கணினி புள்ளிவிவரப் பதிவாளர்கள் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். இந்த பணியிடங்களை பணி நியமன முகமை (JOB CONSULTANCY) மூலம் நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. 

இப்பணியை மேற்கொள்ளத் தகுதி வாய்ந்த பணி நியமன முகமைகள் நிறுவனத்தின் விவரங்கள் மற்றும் அனுபவங்களைத் தபால் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்பலாம். வரும் 7-ம் தேதி மாலை 5 மணிக்குள் விவரங்கள் வந்தடைய வேண்டும். தேர்வாகும் பணிநியமன முகமை ஒப்பந்தப் பணியாளர்களை உடனடியாக தேர்வு செய்து வழங்க வேண்டும். 

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...