வெள்ளலூர் குளக்கரையில் மியாவாக்கி முறையில் மரங்களை நட்ட கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு

கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் சார்பில் இன்று வெள்ளலூர் குளக்கரையில் மியாவாக்கி முறையில் ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.

கோவை: கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் சார்பில் இன்று வெள்ளலூர் குளக்கரையில் மியாவாக்கி முறையில் ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. 



வெள்ளலூர் குளக்கரையை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், குளத்தைச் சுற்றியுள்ள கரைப் பகுதியில் அடர்த்தியான முறையில் மரங்களை வளர்க்கும் மியாவாக்கி முறையில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.



கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் தன்னார்வளர்கள் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் குளக்கரையை சுற்றி 1000 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.



இது குறித்த ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், "மியாவாக்கி முறையில் குளத்தைச் சுற்றிலும் மரக்கன்றுகளை நடவு செய்யும் போது நிலத்தடி நீர்மட்டமானது உயர்கிறது. குளத்தை நம்பி உயிர்வாழும் பூச்சிகளுக்கும், பறவைகளுக்கும் இது உறைவிடமாக அமையும்" என்றனர். 

இந்த நிகழ்ச்சியில், சமூக ஆர்வளர் A.P.அன்பரசன், கோயம்புத்தூர் ரோட்டரி கிளப்பை சேர்ந்த C.R.துரை ராஜ், வெள்ளலூர் பஞ்சாத்தின் முன்னாள் தலைவர் மருதாச்சலம், சிறுதுளி அமைப்பைச் சேர்ந்த மணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...