டாக்டர் பாபு ராணி-க்கு தொழில் நுட்ப சிறப்பு விருதை வழங்கியது கோயம்புத்தூர் ரோட்டரி கிளப்

2017-2018 ஆம் ஆண்டுக்கான தொழில் நுட்ப சிறப்பு விருதினை டாக்டர் பாபு ராணி-க்கு கோயம்புத்தூர் ரோட்டரி கிளப் வழங்கியது.

கோவை: 2017-2018 ஆம் ஆண்டுக்கான தொழில் நுட்ப சிறப்பு விருதினை டாக்டர் பாபு ராணி-க்கு கோயம்புத்தூர் ரோட்டரி கிளப் வழங்கியது.

தொழில் நுட்பத்தில் சிறப்பு பணிபுரிபவர்களுக்கும் மற்றும் சேவையில் தலைசிறந்து விளங்குபவர்களுக்கும் கோயம்புத்தூர் ரோட்டரி கிளப் (Rotary club of Coimbatore Down Town) சார்பில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, இந்தாண்டு மகளிர் நோய் மற்றும் மகப்பேரியல் துறையில் பாராட்டத்தக்க சேவை செய்தமைக்காக மருத்துவர் பாபு ராணிக்கு தொழில்நுட்ப சிறப்பு விருது கோயம்புத்தூர் ரோட்டரி கிளப் சார்பில் வழங்கப்பட்டது.

மேலும், சிறந்த சேவை மனப்பான்மையுடன் பணியாற்றியதற்காக சங்கரா கல்வி நிறுவனத்தின் துணை செயலாளர் நித்யா ராமச்சந்திரன், ஸ்ரீ ஆனந்ஸ்தாஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மணிகண்டன், ஆர்.எஸ்.புரம் காவல் நிலைய ஆய்வாளர் ஜோதி மற்றும் மேலும் 2 பேருக்குச் சிறந்த சேவைக்கான விருது வழங்கப்பட்டது.



நேற்று மாலை சேம்பர் ஹாலில் நடைபெற்ற இந்த விருது வழங்கும் விழாவில் கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலைய இயக்குநர் ஆர்.ஆர்.மகாலிங்கம், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு விருதுகளை வழங்கினார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...