பள்ளி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் ”குளச்சவாரி”

சுற்றுச்சூழல் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படும் வகையில், கோவையில் உள்ள முக்கிய குளங்களுக்கு பள்ளி மாணவர்கள் அழைத்து செல்லப்பட்டனர்.

கோவை: சுற்றுச்சூழல் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படும் வகையில், கோவையில் உள்ள முக்கிய குளங்களுக்கு பள்ளி மாணவர்கள் அழைத்து செல்லப்பட்டனர்.

சதுப்பு நில தினத்தையொட்டி, இந்திய சுற்றுச்சூழல் அறக்கட்டளையானது (இ.எப்.ஐ.,), பள்ளி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த குளச்சவாரியை அறிமுகப்படுத்தியது. அதன்படி, கோவையில் உள்ள முக்கிய ஏரிகளில் பள்ளி மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.  இதில், முத்தன்னன் குளத்தில் தொடங்கிய இந்த சவாரி, செல்வம்பதி குளம், நரசம்பதி குளம், கிருஷ்ணம்பதி குளம், செல்வசிந்தாமணி குளத்தில் முடிவடைந்தது. இந்த சவாரியின் போது, சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு ஒன்றிப் போகும், புவியியல், நீர் இயல் போன்றவை குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

சமூக வலைதளமான பேஸ்புக்கில் இ.எப்.ஐ., என்ற பக்கத்தில் விருப்பமுள்ளவர்கள் தங்களது பெயர்களைப் பதிவு செய்து கொள்ளலாம். முதலில் முன்பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். சுமார் 3 மணி நேரம் கொண்ட இந்த சவாரியானது இலவசமாக செய்து தரப்படுகிறது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...