திருச்சி - சேலம் இடையே பயணிகள் சிறப்பு ரயில் அறிவிப்பு

ரயில் பயணிகளின் கோரிக்கையை ஏற்று திருச்சி மற்றும் சேலம் மாவட்டங்களுக்கு இடையே பயணிகள் சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ரயில் பயணிகளின் கோரிக்கையை ஏற்று திருச்சி மற்றும் சேலம் மாவட்டங்களுக்கு இடையே பயணிகள் சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக சேலம் பிராந்திய ரயில்வே மேலாளர் ஸ்ரீ ஹரி சங்கர் கூறுகையில்,  திருச்சி, சேலம் மாவட்டங்களுக்கு இடையே பயணிகள் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. வரும் 5-ம் தேதி முதல் இயக்கப்படும் இந்த ரயில்சேவையானது, ஞாயிற்றுக்கிழமையைத் தவிர வாரத்தின் 6 நாட்கள் இயக்கப்பட உள்ளன. திருச்சி - கரூர் பயணிகள் ரயில் நாமக்கல் வழியாக சேலம் வரை இயக்கப்படுகிறது. இந்த ரயில்சேவை சோதனை ஓட்டமாக 3 மாத காலம் செயல்படுத்தப்பட உள்ளது. இவ்வாறு கூறினார். 

திருச்சி - சேலம் இடையே ரயில்சேவை:

திருச்சி - கரூர் பயணிகள் ரயில் (எண் - 76833) (நீட்டிக்கப்பட்ட சேவை) :  திருச்சியில் இருந்து புறப்படும் நேரம் காலை 09.35 மணி. கரூர் சென்றடையும் நேரம் காலை 11.35 மணி.

கரூர் - சேலம் சிறப்பு பயணிகள் ரயில் (எண் - 06833) : கரூரில் இருந்து புறப்படும் நேரம் காலை 11.40. சேலத்திற்கு சென்றடையும் நேரம் பிற்பகல் 01.20 மணி.

சேலம் - திருச்சி இடையேயான ரயில்சேவை:

சேலம் - கரூர் பயணிகள் சிறப்பு ரயில் (எண் - 76833) : சேலத்தில் இருந்து புறப்படும் நேரம் பிற்பகல் 01.30 மணி. கரூர் சென்றடையும் நேரம் பிற்பகல் 03.20 மணி.

கரூர் - திருச்சி சிறப்பு பயணிகள் ரயில் (எண் - 06833) (நீட்டிக்கப்பட்ட சேவை): கரூரில் இருந்து புறப்படும் நேரம் மாலை 03.30 மணி. திருச்சிக்கு சென்றடையும் நேரம் மாலை 05.35 மணி.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...