ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தில் இலவச பரிசோதனை முகாம் 4-ம் தேதி தொடக்கம்

உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் ஆராய்ச்சி மையம் சார்பில் இலவச பரிசோதனை முகாம் இந்த மாதம் முழுவதும் நடத்தப்படுகிறது.

கோவை: உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் ஆராய்ச்சி மையம் சார்பில் இலவச பரிசோதனை முகாம் இந்த மாதம் முழுவதும் நடத்தப்படுகிறது. 

ஆண்டுதோறும் பிப்ரவரி 4-ம் தேதி புற்றுநோய் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் ஆராய்ச்சிமையம் கடந்த 15 ஆண்டுகளாக துண்டு பிரசுரங்கள், இலவச புற்றுநோய் முகாம், கண்காட்சி, தொலைபேசி, செல்போன் வாயிலாக பிரச்சாரங்களை செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. 

இந்த நிலையில், இந்த ஆண்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் ஆராய்ச்சி மையம் சார்பில் புதிய யூடியுப் சேனல் தொடங்கப்படுகிறது. மேலும், இந்த மாதம் முழுவதும் இலவச புற்றுநோய் பரிசோதனை முகாம் நடத்தப்படுகிறது. இது தொடர்பாக அந்த மையத்தின் இயக்குநர் டாக்டர் பி. குகன் கூறியதாவது, இந்த ஆண்டு உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு, ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் சிகிச்சை மையம், விரிவான விளக்கங்களை பிப்.,4-ல், உலகிலேயே முதல் முறையாக யூடியுப் சேனலில் படக்காட்சிகளை வெளியிடுகிறது.

உடலில் பல்வேறு வகையான புற்றுநோய்கள், தலை, கழுத்து, கடைபெருங்குடல், மூளை, வயிறு, வெள்ளையணு பிளாஸ்மா, ரத்தத்தில் சேரும் தேவையற்ற செல்களின் வளர்ச்சி, கணைய புற்றுநோய், கர்ப்பப்பை மற்றும் மார்பக புற்றுநோய் போன்ற 14 வகை புற்றுநோய்க்கு தலா ஒவ்வொன்றுக்கும் 7 விளக்கங்கள் தரப்ட்டுள்ளன. புற்றுநோய்க்கான காரணிகள், சிகிச்சை முறை, வருமுன் காக்கும் முறைகள், தடுப்பு முறைகள் பற்றி இடம்பெற்றுள்ளன. 

மேலும், ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தில் வரும் 4-ம் தேதி தொடங்கும் விந்தகப்பை சுரப்பியில் ஏற்படும் புற்றுநோய் பரிசோதனை மற்றும் அல்ட்ராஸ்கேன் சோதனை இலவசமாக செய்யப்படுகிறது. இந்தப் பரிசோதனை மாதம் முழுவதும் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.



Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...