உக்கடம் பகுதியில் இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதிய விபத்தில் ஒருவர் பலி: மற்றொருவர் படுகாயம்

கோவை உக்கடம் பேருந்து நிலையம் முன்பு அரசுப் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.



கோவை: கோவை உக்கடம் பேருந்து நிலையம் முன்பு அரசுப் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  

உக்கடம் பேருந்து நிலையத்திற்கு அரசுப் பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தது.  பேருந்து நிலையம் முன்பு உள்ள போக்குவரத்து சிக்னல் வேலை செய்யவில்லை. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு மத்தியில் சிக்னலை கடந்து சென்று கொண்டிருந்தனர். 

இந்த நிலையில், பாலக்காடு சாலையில் வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்து, உக்கடம் பேருந்து நிலையத்திற்குள் திரும்ப முயன்றது. அப்போது, சுங்கம் வழியாக வந்து கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், முன்புற சக்கரம் இருசக்கர வாகனத்தின் மீது ஏறி இறங்கியது. இதில், வாகனத்தில் வந்த இளைஞர்கள் இரண்டு பேரும் பேருந்தின் கீழ் சிக்கிக் கொண்டனர்.



இதைத்தொடர்ந்து, பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அரசுப் பேருந்தை நகர்த்தி வைத்து விபத்தில் சிக்கிய இளைஞர்களை மீட்டனர். இதில், சதீஷ் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். ஹரிபிரசாத் என்பவர் பலத்த காயமடைந்தார். அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்திற்கு காரணம் அரசுப் பேருந்து ஒட்டுநரின் கவனக்குறைவு தான் என்று அப்பகுதியினர் தெரிவித்தனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...