வடமாநில கொள்ளையர்களை கோவை போலீஸார் கைது செய்தது எப்படி..? மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விளக்கம்

கோவை அருகே பெண்ணை கொலை செய்து பணம், நகைகளை கொள்ளையடித்த வடமாநில இளைஞர்கள் எவ்வாறு கைது செய்யப்பட்டனர் என்பது குறித்த தகவலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூர்த்தி விளக்கியுள்ளார்.

கோவை: கோவை அருகே பெண்ணை கொலை செய்து பணம், நகைகளை கொள்ளையடித்த வடமாநில இளைஞர்கள் எவ்வாறு கைது செய்யப்பட்டனர் என்பது குறித்த தகவலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூர்த்தி விளக்கியுள்ளார். 

அன்னூர் அருகே உள்ள கனுவக்கரையில் கடந்த 26-ம் தேதி ராஜாமணி என்பவரை கொலை செய்த வடமாநில இளைஞர்கள், அவரது கணவர் மயில்சாமிக்கு மின்சாரம் கொடுத்து கொலை செய்ய முயன்றனர். பின்னர், வீட்டில் இருந்த 6 பவுன் தங்க நகைகள் மற்றும் பணம் ஒரு லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர். இதனைத் தொடர்ந்து, அன்னூர் போலீஸார் ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையில் 10 பேர் கொண்ட தனிப்படை போலீசார் மேற்குவங்கம் சென்றனர். கொள்ளையர்கள் சாம்ராடசகா, பிண்டு மாலிக், அஜய்ராய் ஆகியோரை அம்மாநில போலீசார் உதவியுடன் கைது செய்தனர். 

இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூர்த்தி கருமத்தம்பட்டி காவல்நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அவர் கூறியதாவது, பெண்ணைக் கொலை செய்த இளைஞர்கள் இருசக்கர வாகனம் மூலம் திருப்பூர் சென்றனர். அங்கிருந்து சொந்த ஊரான மேற்குவங்க மாநிலத்திற்கு சென்றனர். அவர்களின் ஒரு செல்போன் எண்ணை வைத்து மேற்குவங்கம் சென்ற தனிப்படை போலீசார், அம்மாநில போலீசார் உதவியுடன் மூன்று பேரையும் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட தங்கநகை மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு அவர்களை விமானம் மூலம் அழைத்து வந்தனர்.

இவர்கள், மூன்று பேர் மீதும் கோவை மாவட்டத்தில் வேறு குற்ற வழக்குகள் இல்லை, வேறு எங்காவது உள்ளதா..? என விசாரணை நடைபெற்று வருகிறது. வட மாநில தொழிலாளர்களை பணியில் அமர்த்துபவர்கள் அவர்கள் குறித்து முழு விபரங்களையும் வைத்திருக்க வேண்டும்.  இவ்வாறு அவர் கூறினார். 

முன்னதாக, மேற்குவங்கம் சென்ற தனிப்படை போலீஸார் தேவையான ஆயுதங்களுடன் சென்றதாகவும், அம்மாநில போலிசாருடன் இணைந்து செயல்பட்டதால் குற்றவாளிகளை பிடிக்க முடிந்ததாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூர்த்தி தெரிவித்தார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...