பாரதியார் பல்கலை., துணைவேந்தரிடம் லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரணை

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் நியமனத்திற்கு லஞ்சம் வாங்கியதாக துணைவேந்தர் கணபதி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை : கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் நியமனத்திற்கு லஞ்சம் வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து, துணைவேந்தர் கணபதி லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தராக கணபதி, கடந்த 17.03.2016 ல் துணை வேந்தராக நியமனம் செய்யப்பட்டார். அப்போது, பாரதியார் பல்கலைக்கழக பல்வேறு துறைகளில் 82 பணியிடங்கள் நிரப்ப அந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிவிப்பு வெளியானது. இதைத்தொடர்ந்து, இந்தப் பணியிடங்களுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். நேர்முகத் தேர்வில் முன்னுக்குப் பின் முரணான தேதிகள் அறிவித்ததால், அப்போதே முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆளுநர், உயர்கல்வி செயலர் ஆகியோருக்குப் புகார்கள் தெரிவிக்கப்பட்டன. ஒரு பணியிடத்துக்கு பல லட்சங்கள் பெறப்பட்டதாக கூறப்பட்டது. அதையும் மீறி நவம்பர் மாதம் பணியிடங்கள் நிரப்பப்பட்டன.

பணி நியமனம் வழங்கும் முன்பாக, அதை நிறுத்தி வைக்க உயர் கல்வித்துறை கடிதம் அனுப்பியது. ஆனால், அதையும் மீறி நியமன ஆணை வழங்கப்பட்டது. இதையடுத்து, அப்போதைய பதிவாளர் மோகன், துணைவேந்தர் இருவரும் மாறி மாறி புகார்களை தெரிவித்துக் கொண்டனர். இதனால், மோகன் பதிவாளர் பொறுப்பிலிருந்து விலகினார். பின்னர், வனிதா என்பவர் பதிவாளராக நியமிக்கப்பட்டார். பல்வேறு தரப்பில் இருந்தும் துணை வேந்தருக்கு எதிர்ப்பு எழுந்தது. பேராசியர்கள் தரப்பிலிருந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதனிடையே, கோவை நவாவூரை சேர்ந்த லட்சுமிபிரபா பணியிட நியமன முறைகேடு தொடர்பாக உயர்கல்வித்துறை, ஆளுநர் உள்ளிட்டோருக்கு மனு அனுப்பியினார். அவரது கணவர் 1978-ல் பல்கலைக்கழகத்துக்கு நிலம் வழங்கியதன் பேரில் ஓட்டுநர் வேலை பெற்றார். லட்சுமி பிரபாவின் புகாரை அடுத்து அவரது கணவர் வேலை நீக்கம் செய்யப்பட்டார். தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய அறிவுறுத்தலின் பேரில் துணைவேந்தர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், உதவி பேராசிரியர் பணி நியமனத்துக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் கேட்டதாக பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி மீது சுரேஷ் என்பவர் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரை அடுத்து கோவையில் உள்ள அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சுரேஷிடம் இருந்து ரூ.1 லட்சம் ரொக்கமாகவும், எஞ்சிய ரூ.29 லட்சத்தை காசோலையாகவும் துணைவேந்தர் கணபதி பெற்றதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் லஞ்ச ஒழிப்புதுறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...