சான்றிதழ் வழங்க மருத்துவர்கள் அலைக்கழிப்பு : ஆத்திரமடைந்த மாற்றுத்திறனாளிகள் சாலைமறியல்

மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ் வழங்க மருத்துவர்கள் அலைக்கழிப்பதாகக் கூறி திருப்பூர் அரசு மருத்துவமனை முன்பு மாற்றுத்திறனாளிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

திருப்பூர் : மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ் வழங்க மருத்துவர்கள் அலைக்கழிப்பதாகக் கூறி திருப்பூர் அரசு மருத்துவமனை முன்பு மாற்றுத்திறனாளிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.



மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு தேவையான அரசு உதவிகளைப் பெற மருத்துவ சான்றிதழ் அவசியமாகும். திருப்பூர் அரசு மருத்துவமனையில் தமிழக அரசு வழங்கும் மானிய விலையிலான இருசக்கர வாகனம் உள்ளிட்ட அரசு உதவி பெறும் திட்டங்களுக்கான மருத்துவ சான்றிதழ் பெற வந்திருந்த மாற்றுத்திறனாளிகளை அதிகாரிகள் நீண்ட நேரமாக அலைக்கழித்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த மாற்றுத்திறனாளிகள், சான்றிதழ் வாங்க வரும் ஒவ்வொரு முறையும் இதேபோன்று அலைக்கழிப்பதாகக் கூறி, அரசு மருத்துவமனை முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 



இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் மாற்றுத்திறனாளிகளிடம் சமரசம் பேசி மருத்துவர்களிடம் அழைத்துச் சென்றனர். இதனைத் தொடர்ந்து, மருத்துவர்கள் நாளை சான்றிதழ் வழங்குவதாக உறுதியளித்ததின் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...