தேசிய மருத்துவ காப்பீடு திட்டம் அக்., 2-ம் தேதி தொடக்கம்

மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட தேசிய மருத்துவ காப்பீடு திட்டம் வரும் அக்டோபர் 2-ம் தேதி (காந்தி ஜெயந்தி) அன்று தொடங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட தேசிய மருத்துவ காப்பீடு திட்டம் வரும் அக்டோபர் 2-ம் தேதி (காந்தி ஜெயந்தி) அன்று தொடங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

2018-19 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி நேற்று தாக்கல் செய்தார். ஏழை, எளிய மக்களுக்காக நாடு முழுவதும் அமல்படுத்தும் வகையில், தேசிய மருத்துவ காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படும் என அவர் அறிவித்தார். 10 கோடி பேர் தலா 5 லட்சம் ரூபாய் அளவில் காப்பீடு பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்தத் திட்டம் வரும் அக்டோபர் மாதம் 2-ம் தேதி (காந்தி ஜெயந்தி) முதல் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் கோடி ரூபாய் வரை இதற்காக ஒதுக்கப்படும் என நிதி ஆயோக் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஒரு குடும்பத்துக்கு 1,000 ரூபாய் முதல் 1,200 ரூபாய் வரை இதற்கான ப்ரீமியம் செலுத்த வேண்டியதிருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...