பல்லடம் கழிவு பஞ்சு குடோனில் தீவிபத்து : போலீஸார் விசாரணை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கழிவு பஞ்சு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தை, ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்புத் துறையினர் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் பல்லடம் கழிவு பஞ்சு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தை, ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்புத் துறையினர் கட்டுக்குள் கொண்டு வந்தனர். 



பல்லடத்தை அடுத்த அம்மாபாளையம் சி.எம். நகரில் வசித்து வருபவர் நாகராஜ். இவருக்குச் சொந்தமான கழிவுப்பஞ்சு குடோன் அப்பகுதியில் உள்ளது. இந்நிலையில், இன்று மதியம் குடோனில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதனால், அங்கு புகை வருவதைக் கண்ட தொழிலாளர்கள் உடனடியாக குடோனில் இருந்து வெளியேறினர். அதனைத் தொடர்ந்து பல்லடம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பொதுமக்கள் உதவியுடன் தீயை அணைக்க முயற்சித்தனர். மேலும், தனியார் தண்ணீர் லாரிகளின் உதவியுடன் சுமார் ஒரு மணி நேரமாகப் போராடி தீயை அணைத்தனர். 

குடோனில் மின்சார இணைப்பு இல்லாத நிலையில், எவ்வாறு தீ விபத்து நிகழ்ந்தது என பல்லடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தீவிபத்து ஏற்பட்டது குறித்த தகவல் கிடைத்து சுமார் 20 நிமிடம் காலதாமதமாக பல்லடம் தீயணைப்பு துறையினர் வந்ததாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.  

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...