சதுப்பு நிலங்களைப் பாதுகாக்க வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் பேரணி

உலக சதுப்பு தினத்தை முன்னிட்டு சதுப்பு நிலங்களைப் பாதுகாக்க வலியுறுத்தி கோவை ஏ.ஜே.கே. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பில் பேரணி நடத்தப்பட்டது.

கோவை: உலக சதுப்பு தினத்தை முன்னிட்டு சதுப்பு நிலங்களைப் பாதுகாக்க வலியுறுத்தி கோவை ஏ.ஜே.கே. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பில் பேரணி நடத்தப்பட்டது. 



உலக சதுப்பு தினத்தை முன்னிட்டு சதுப்பு நிலங்களைப் பாதுகாக்க வலியுறுத்தி கல்லூரி மாணவர்களின் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் கோவையில் நடைபெற்றது. சிங்காநல்லூர் குளக்கரை அருகே நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் சதீஷ் மரக்கன்றுகளை பொதுமக்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கினார். இதைத் தொடர்ந்து, பாரதியார் பல்கலைக்கழகத்தின் சார்பில் நேற்று விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 



இதன் ஒருபகுதியாக சதுப்பு நிலங்களைப் பாதுகாக்க வலியுறுத்தி கோவை நவக்கரை அடுத்துள்ள ஏ.ஜே.கே. கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி முன்பு துவங்கிய இப்பேரணியை இந்திய தொழில் வர்த்தகசபை தலைவர் வனிதா மோகன் துவக்கி வைத்தார். பேரணியில், சதுப்பு நிலங்கள் பாதுகாப்பு குறித்த பதாகைகளை ஏந்தியபடி பேரணியாக சென்றனர். 

வட்டார போக்குவரத்து அலுவலகம் வழியாக சென்ற பேரணி வ.ஊ.சி. மைதானத்தில் நிறைவடைந்தது. அங்கு மாணவ, மாணவிகள் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். இந்தப் பேரணியில் 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...