திருப்பூரில் செவிலியர் பயிற்சி மாணவிகளுக்கு திடீர் வாந்தி, மயக்கம் : மருத்துவமனையில் அனுமதி

திருப்பூரில் விடுதி உணவு ஒவ்வாமையால் செவிலியர் பயிற்சி மாணவிகள் 9 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால், சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

திருப்பூர்: திருப்பூரில் விடுதி உணவு ஒவ்வாமையால் செவிலியர் பயிற்சி மாணவிகள் 9 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால், சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 



தாராபுரத்தை அடுத்த தெக்காலூரில் செயல்பட்டு வரும் தனியார் செவிலியர் பயிற்சி கல்லூரியில் விடுதி மாணவியர் 60 பேர் இன்று காலை 7 மணிக்கு காலை உணவை முடித்துவிட்டு, பின்னர் கல்லூரி பேருந்தில் திருப்பூர் அரசு மருத்துவமனைக்குப் பயிற்சிக்காக சென்றனர். அப்போது, மருத்துவமனை வளாகத்தினுள் வந்து இறங்கிய போது 9 மாணவிகளுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனால், அவர்களை சக மாணவிகள் மருத்துவமனையில் அவசர பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 



பின்னர், இது தொடர்பாக தகவலறிந்த மருத்துவமனை புறக்காவல் நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு மாணவிகளை ஒத்துழைக்க விடாமல் கல்லூரி முதல்வர் தடுத்ததால், மாணவிகளின் பெயரை கூட கூற மறுத்ததோடு சிகிச்சையை பாதியிலேயே விட்டுவிட்டு அதிரடியாக அங்கிருந்து மருத்துவர்களிடம் கூறாமல் கல்லூரி பேருந்தில் ஏற்றிச் செல்ல முயன்றனர்.



இதனைக் கண்ட காவல்துறையினர் பேருந்து ஓட்டுநரை எச்சரித்து, பேருந்தில் இருந்த மாணவிகளை சிகிச்சைக்காக திரும்ப அழைத்து சென்றனர். காலை உணவு ஒவ்வாத நிலையில் மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு சிகிச்சை அளிக்காமல் செய்தி வெளியே சென்றுவிடாமல் தடுப்பதிலேயே கல்லூரி நிர்வாகம் கண்ணும், கருத்துமாக செயல்பட்டது பொதுமக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...