நீலகிரியில் பிளாஸ்டிக்கிற்கு எதிரான விழிப்புணர்வு இயக்கத்தை தொடங்கி வைத்தார் ஆட்சியர்

நீலகிரியில் பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு இயக்கத்தை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா துவக்கி வைத்தார்.

நீலகிரி: நீலகிரியில் பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு இயக்கத்தை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா துவக்கி வைத்தார்.



மலை மாவட்டமான நீலகிரியில் பசுமையைக் கருத்தில் கொண்டு பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. நாடு முழுவதும் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான உதகையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால், உதகையின் முக்கிய பகுதிகளில் ஏராளமான கடைகள் செயல்பட்டு வருகின்றன. அவைகளில், பெரும்பாலான கடைகளில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்டவைகளை பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

மேலும், நீலகிரி மாவட்டத்தை தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மையானதாகவும், பசுமையானதாகவும் மாற்றும் முயற்சியில் மாவட்ட நிர்வாகம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தை செயல்படுத்த பொதுமக்கள், வணிகர்கள், சுற்றுலா பயணிகள் மத்தியில் விழிப்புணர்வு இயக்கங்கள் நடத்தப்பட்டு, விழிப்புணர்வு பிரசுரங்கள் அவ்வப்போது விநியோகிக்கப்பட்டு வருகிறது.



இதன் தொடர்ச்சியாக, உதகை மார்கெட் பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு இயக்கத்தை இன்று (பிப்.,02) மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா துவக்கி வைத்தார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...