தினகரன் ஆதரவாளர் முன்னாள் எம்.பி. குமாரசாமி கட்சியில் இருந்து அதிரடி நீக்கம்

தினகரன் ஆதரவாளர் முன்னாள் எம்.பி. குமாரசாமி கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்படுவதாக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளனர்.

தினகரன் ஆதரவாளர் முன்னாள் எம்.பி. குமாரசாமி கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்படுவதாக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளனர்.

அ.தி.மு.க.வில் தினகரன் ஆதரவாளர்கள் தொடர்ந்து பல மாவட்டங்களில் நீக்கப்பட்டு வருகின்றனர். இன்று திண்டுக்கல் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் 175 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். நீக்கப்பட்டவர்களில் முன்னாள் எம்.பி. பி.குமாரசாமி (மாவட்ட துணை செயலாளர்), பொதுக்குழு உறுப்பினர் சரவணகுமார், மருத்துவ அணி செயலாளர் டாக்டர் இளம்வழுதி எம்.ஜி.ஆர் மன்ற நிர்வாகிகள் பொன்னுதுரை, அழகுமலை, மாவட்ட மகளிர் அணி தலைவி தமிழரசி, சினாத் தேவர், வைகை பாலன், துரைராஜ், மதன்குமார் அழகுராஜா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

மேற்கண்டவர்கள் உள்பட 175 பேர் அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர்கள் பொறுப்பு உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுவதாக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...