2018-19 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மக்களுக்கானது : இந்திய தொழிற்சாலைகளின் கூட்டமைப்பு வரவேற்பு

2018-19 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டானது, பொதுமக்கள் பயனடையும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாகக் கோவை மண்டல இந்திய தொழிற்சாலைகளின் கூட்டமைப்பு கூறியுள்ளது.

கோவை : 2018-19 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டானது, பொதுமக்கள் பயனடையும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாகக் கோவை மண்டல இந்திய தொழிற்சாலைகளின் கூட்டமைப்பு கூறியுள்ளது. 

இதன் தலைவர் எஸ். நாராயணன் கூறுகையில், இன்று அறிவிக்கப்பட்ட பட்ஜெட், சிறந்த அம்சங்களைக் கொண்டது.  விவசாயம், கல்வி, மருத்துவம் மற்றும் சமூக பாதுகாப்பு போன்றவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. சிறு மற்றும் குறு நிறுவனங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள வரியால், அவைகள் புத்துயிர் பெற்றுள்ளன. தற்போதைய பட்ஜெட்டின் மூலம் நிதி நிலையைப் பலப்படுத்துவதன் மூலம் எதிர்காலத்தில் முதலீட்டாளர்களிடம் நம்பிக்கையை அதிகரிக்கச் செய்ய முடியும்.

பெரும்பாலும் சி.ஐ.ஐ. பரிந்துரை செய்தவை அனைத்தும் தற்போதைய பட்ஜெட்டியில் இடம்பிடித்துள்ளன. குறிப்பாக, வேலைவாய்ப்பை உருவாக்குதல், ஊழியர்களின் பணிநிரந்தரக் காலம் நீட்டிப்பு, கல்வியின் தரம் உயர்த்துதல், ஆசியர்களுக்குப் பயிற்சி மற்றும் மருத்துவத்துறைகளில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைள், இனிவரும் காலங்களில் பொருளதாராத்தை உயர்த்தக் கூடியதாக இருக்கும். என்றார். 

இதேபோல, கோவை மண்டல இந்திய தொழிற்சாலைகளின் கூட்டமைப்பின் துணைத் தலைவர் எம். ரமேஷ் கூறுகையில், வேலைவாய்ப்பை உருவாக்குதல் மற்றும் தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் விதமான நடவடிக்கைகள் போன்ற முயற்சிகளை மேற்கொண்டுள்ள மத்திய அரசை  தொழில்நிறுவனங்கள் பாராட்டுகின்றன.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...