தாய்ப்பால் கொடுக்கும் அறை சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய அவலம் : அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்ட மகளிருக்கான தாய்ப்பால் கொடுக்கும் அறை சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. இதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை : ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்ட மகளிருக்கான தாய்ப்பால் கொடுக்கும் அறை சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. இதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தபோது கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்மார்களுக்கும், ஆதரவற்ற குழந்தைகளுக்கான தொட்டில் குழந்தை திட்டம் உட்பட பல அரிய திட்டங்களை கொண்டு வந்தார். இந்த திட்டங்கள் அனைத்தும் சிறப்பாக செயல்பட்டு வந்த நிலையில், தற்போதைய தமிழக அரசின் மெத்தனமான செயல்பாட்டால் தாய்மார்கள் பாலூட்டும் அறை மூடிக்கிடக்கிறது. பேருந்து நிலையங்களில் வரும் பயணிகள் தங்களது குழந்தைகளுக்கு பாலூட்ட வேண்டிய சூழல் இருப்பதால் மூடிக்கிடக்கும் இந்த அறையை பயன்படுத்த முடியாமல் தவித்து வருவதாக பொது மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். 

உக்கடம், மேட்டுப்பாளையம், சிங்காநல்லூர் பேருந்து நிலையங்களிலுள்ள தாய்மார்கள் பாலூட்டும் அறை, தற்போது சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியிருக்கிறது. தமிழக அரசு மற்றும் அதிகாரிகளின் மெத்தனத்தால் பாதிக்கப்படுவது பொதுமக்கள் தான் என்பதை எப்போது உணரப்போகிறார்கள் ஆளும் வர்க்கத்தினர் என்று கேள்வியை பொதுமக்கள் எழுப்புகின்றனர். எனவே, கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்மார்களின் நலன்கருதி தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து, தாய்மார்கள் பாலூட்டும் அறையை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். 

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...