நதிகளை மீட்போம் : சத்குருவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட விவசாயிகள்

கோவை ஈஷா யோகா மையத்தில் இன்று நடைபெற்ற 'நதிகளை மீட்போம்' கருத்தரங்கில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் தலைவர்கள் கலந்து கொண்டு சத்குருவுடன் கலந்துரையாடினர்.

கோவை : கோவை ஈஷா யோகா மையத்தில் இன்று நடைபெற்ற 'நதிகளை மீட்போம்' கருத்தரங்கில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் தலைவர்கள் கலந்து கொண்டு சத்குருவுடன் கலந்துரையாடினர்.



நதிகளை மீட்போம் இயக்கத்தின் கருத்தரங்கம் இன்று காலை கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விவசாயிகள் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகள், நீர்ப்பாசனம், நதி நீர் அதிகரிப்பு உள்ளிட்டவை விவாதிக்கப்பட்டன. 

நிகழ்ச்சியில் பேசிய சத்குரு, 'தென்னிந்தியாவில் இருந்து இமய மலை வரை உலகத்தில் உள்ள அனைத்துப் பயிர்களையும் விளைவிக்கக்கூடிய சீதோஷண நிலை தமிழகத்திற்கு உண்டு. ஆனால், விவசாயிகள் ஒன்று கூடி செயல்படாமல் பலவீனமாக உள்ளனர். விவசாயத்தை நம்பிய நாட்டின் அரசு விவசாயிகளின் அரசாகத்தான் இருக்க முடியும். 

பல்வேறு நாடுகளில் இன்று வெற்றிகரமாகச் செயல்படும் அவர்கள் நம் நாட்டுப் பல்கலையில் படித்துச் சென்றவர்கள். கால்நடைகளும், மரங்களும், விலங்குகளும் தேவையான அளவு வைத்திருக்க வேண்டும், அப்போது தான் மண் வளமுறும். இது நம் முன்னோர்கள் அறிந்த ஒன்றாகும். விவசாயிகளுக்கான 'ஆப்' (APP) ஒன்றைத் துவங்க உள்ளோம். அது அனைத்து விவசாயிகளுக்கும் பயனளிக்கும் வகையில் இருக்கும். இந்த நிகழ்ச்சியில், உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து, தமிழ்நாடு விவசாயிகள் கூட்டு இயக்கத்தின் மாநிலத் தலைவர் சுப்ரமணியம் போன்ற விவசாய சங்கத் தலைவர்கள் கலந்துகொண்டனர். 

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...