பொது மக்களுக்காக தொலைநோக்குப் பார்வையில் உருவாக்கப்பட்ட பட்ஜெட் : சர்வதேச தொழில்முனைவோர் அமைப்பு கருத்து

மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் நடுநிலைமையுடனும், பொதுமக்களுக்காக தொலைநோக்குப் பார்வையில் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக சர்வதேச தொழில்முனைவோர் அமைப்பு தெரிவித்துள்ளது.

கோவை: மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் நடுநிலைமையுடனும், பொதுமக்களுக்காக தொலைநோக்குப் பார்வையில் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக சர்வதேச தொழில்முனைவோர் அமைப்பு தெரிவித்துள்ளது. 

மத்திய பட்ஜெட்டிற்கு வரவேற்பு தெரிவித்து சர்வதேச தொழில்முனைவோர் அமைப்பின் தலைவர் ஆடிட்டர் ஜி. கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தேசிய பாதுகாப்புத் திட்டம் என்ற திட்டத்தின் பெயரில் 10 கோடி குடும்பங்களுக்கு 5 லட்ச ரூபாய் காப்பீடு என்பது வரவேற்கத்தக்க ஒன்று. இதுதவிர இந்த பட்ஜெட்டில் வங்கிக் கடன் மட்டும் இல்லாமல் மற்ற தொழில் தொடங்குபவர்களும் கடன் வாங்கும் விதமாக மாற்று நிதி திட்டங்கள் இருப்பது தொழில் தொடங்குபவர்களுக்கு மற்றும் மிகவும் உதவிகரமாக இருக்கும்.

தவிர இந்த பட்ஜெட்டில் கண்டுபிடிப்புகள் தொடர்பான தொழில்நுட்பத்திற்கு அதிகளவில் நிதி ஒதுக்காதது மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா ஆகியவற்றுடன் ஒவ்வாததைப் போன்று உள்ளது. ரூ. 250 கோடி வரை விற்பனை உள்ள கம்பெனிகளுக்கான வரிவிகிதம் 30%-ல் இருந்து 25% ஆக குறைக்கப்பட்டது நல்ல மாற்றம். நிறுவனங்கள் மற்றும் எல்.எல்.பி. ஆகியவற்றிற்கும் தற்போதைய வரி 30%-ல் இருந்து 25% ஆக குறைத்திருக்க வேண்டும். அமெரிக்காவில் டிரம்ப் அரசு சமீபத்தில் கம்பெனிகளுக்கான வரியை 37%-ல் இருந்து 21% ஆக குறைத்தது குறிப்பிடத்தக்கது.

தனிநபர் வருமான வரி வரம்பு, வீட்டுக் கடனுக்கான வட்டி கழிவு ரூ.2,00,000/- ஆகியவற்றில் மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மேலும், சொல்லக்கூடிய குறைந்தபட்ச மாற்று வரி விகிதம் குறைக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மாற்றம் எதுவுமில்லை. பொதுவில் இந்த நல்ல ஒதுக்கீடு மற்றும் திட்டங்கள் முழுமையாக மக்களை சென்றடைவதை அரசாங்கம் உறுதி செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...