”விரைவில் 5-வது பெரிய பொருளாதார நாடு என்ற பெருமையை இந்தியா பெறும்”

விரைவில் 5-வது பெரிய பொருளாதார நாடு என்ற பெருமையை இந்தியா பெறும் என நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.

இந்தியா: விரைவில் 5-வது பெரிய பொருளாதார நாடு என்ற பெருமையை இந்தியா பெறும் என நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.

மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன்னதாக அவர் பேசியதாவது, நாங்கள் பதவியேற்ற போது நாடு ஊழலில் மூழ்கியிருந்தது. நிர்வாக சீர்கேட்டால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருந்தது. வறுமையை ஒழிப்போம் என உறுதியளித்து இருந்தோம். எங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம். தற்போது நாடு வளர்ச்சி பாதையில் செல்கிறது. வேகமாக வளரும் நாடாக இந்தியாவை மாற்றியுள்ளோம்.

அரசின் நடவடிக்கையால் நேரடி அன்னிய முதலீடு அதிகரித்துள்ளது. ரூபாய் நோட்டு வாபஸ் மூலம் கறுப்பு பணம் ஒழிக்கப்பட்டுள்ளது. வரி சீர்திருத்தங்களால் வரி செலுத்தும் முறை எளிதாகியுள்ளது. 2017 - 18-ம் ஆண்டில் ஏற்றுமதி 15 சதவீதம் அதிகரித்துள்ளது. விரைவில் 5-வது பெரிய பொருளாதார நாடு என்ற பெருமையை இந்தியா எட்டும். இரண்டாவது காலாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 7.5 சதவீதத்தை எட்டும் என எதிர்பார்க்கிறோம். வளர்ச்சிக்கு உற்பத்தி துறை முதுகெலும்பாக உள்ளது. கல்வியை மேம்படுத்த மாநில அரசுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம். பிரதமரின் கொள்கைகள் காரணமாக நாங்கள் சீர்திருத்தங்களை கொண்டு செல்கிறோம். நலிந்தோருக்கு உதவி செய்யும் பட்ஜெட்டாக இது இருக்கும். என்றார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...