‘விறு விறு’ விற்பனை: கோவையில் அமோகமாக விற்பனையாகும் கரும்புசாறு

கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெயிலின் தாக்கத்திலிருந்து தங்களை காத்துக்கொள்ள பொதுமக்கள் கரும்பு சாற்றை அதிக அளவில் பருகி வருகின்றனர். இதனால் கரும்பு சாறு விற்பனை சுடுபிடித்துள்ளது.

கோவை: கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெயிலின் தாக்கத்திலிருந்து தங்களை காத்துக்கொள்ள பொதுமக்கள் கரும்பு சாற்றை அதிக அளவில் பருகி வருகின்றனர். இதனால் கரும்பு சாறு விற்பனை சுடுபிடித்துள்ளது.

மார்கழி கழிந்து தை பிறந்த போதிலும் குளிர் நம் கோவையை விடுவதாயில்லை. அதிகாலையிலும், இரவு நேரங்களிலும் கடும் குளிரும் பனி மூட்டமும் நிலவி வருகிறது. அதே நேரத்தில், பகலில் பங்குனி மாதத்திற்கு நிகராக ‘பல்லைக்காட்டி’ சிரிக்கிறது வெயில்.,

இதனிடையே இந்த வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் மக்கள் அதிக அளவில் கரும்பு சாறுகளை பருகி வருகின்றனர். இளநீர் விலையை ஒப்பீடும் போது கரும்பு சாறு விலை குறைவாக உள்ளதால் விற்பனை அதிகமாக உள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

"நாள் ஒன்றிற்கு சராசரியாக தினமும் 100 டம்பளர் விற்பனை நடைபெற்ற நிலையில் தற்போது 200 டம்பளர் வரை விற்பனை ஆகிறது. 250 மில்லி கிராம் கரும்பு சாறு ரூபாய் 20 மட்டுமே ஆனால் இளநீர் , பழச்சாறு போன்றவை ரூபாய் 30 முதல் 100 வரை விற்கப்படுகிறது." என்றார் கரும்புசாறு வியாபாரி செல்வராஜ்.

ஜல்லிகட்டு போராட்டத்திற்கு பிறகு குளிர்பானங்கள் மீதான மோகம் குறைந்து இது போன்ற இயற்கை பானங்கள் மீதான மோகம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

ஐ.டி ஊழியர் பெருமாள்சாமி கூறுகையில், "வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் கரும்பு சாறு தினமும் அருந்துகிறேன். இதற்கு முன்னர் குளிர்பானங்கள் வாங்கி வந்தேன் ஆனால் ஜல்லிகட்டு போராட்டத்திற்கு பிறகு இயற்கை பானங்கள் தான் அதிக அளவில் உபயோகிக்கிறேன்." என்றார்.

கரும்புசாறு உடலுக்கு மிகவும் நல்லது அதில் நம் உடலுக்கு தேவையான விட்டமின்கள் அதிமாக உள்ளது. வெயில் காலங்களில் கரும்புச்சாறு அருந்தும் போது உடல் சோர்வடையாது. ஆனால், நீரழிவு நோய் உள்ளவர்கள் இதனை மிகவும் குறைவாக தான் அருந்த வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...