கோவை ஏ.டி.எம் கொள்ளையில் வழக்கில் முக்கிய நபர் கைது: கொள்ளையன் குறித்து அதிரவைக்கும் தகவல்கள்

கோவையில் நடைபெற்ற ஏ.டி.எம் கொள்ளை சம்பவத்தில் ஹரியானாவை சேர்ந்த நபரை கோவை மாநகர தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.


கோவை: கோவையில் நடைபெற்ற ஏ.டி.எம் கொள்ளை சம்பவத்தில் ஹரியானாவை சேர்ந்த நபரை கோவை மாநகர தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.



கோவை பீளமேடு அருகே உள்ள தனியார் ஏ.டி.எம் மையத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 9-ம் தேதி புகுந்த மர்ம நபர்கள் ரூ.3 லட்சம் பணத்தை கொள்ளையடித்தனர். 

இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த தினங்களில் அருகில் இருக்கும் ஏ.டி.எம். மையங்களிலும் புகுந்து கைவரிசை காட்டிய அந்த கும்பல் மொத்தமாக ரூ.30 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றது. 

இந்த கொள்ளையர்களை பிடிக்க மாநகர குற்றப்பிரிவு துணை ஆணையர் பெருமாள் தலைமையில் 7 தனிப்படைகளை அமைத்து மாநகர காவல் ஆணையர் K.பெரியய்யா உத்தரவிட்டார். 

தனிப்படையினரின் விசாரணையின் போது கொள்ளையர்கள் நாமக்கல் மற்றும் சேலம் வழியாக பெங்களூர் தப்பிச்செல்ல இருப்பது தெரியவந்தது. 

இதனை தொடர்ந்து அந்த மாவட்டங்களின் போலீசாருடன் இணைந்து செயல்பட்ட கோவை மாநகர போலீசார் கொள்ளையில் ஈடுபட்ட ஜீல்பிகர், முஸ்டாக், மோசம்கான், சுபேர், அமித்குமார், முபாரக், அமீன் மற்றும் சுபேர் ஆகியோரை கைது செய்தனர். 

இந்த கொள்ளை கும்ன்பலின் தலைவன், போலீசாரிடம் இருந்து தப்பித்து தலைமறைவாகினார். 

தொடர்ந்து, தப்பியோடிய கொள்ளையனை தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.

இந்த கொள்ளைக்கு மூளையாக செயல்பட்டது ஹரியான மாநிலத்தை சேர்ந்த சித்திக் அகம்மது என்பவரது மகன் இசுலாமுதீன் (42) என்பது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூர் பகுதிக்கு இசுலாமுதீன் அவரது காதலியை சந்திக்க வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில், நேற்று இரவு ராஜஸ்தான் மாநில போலீசாரின் உதவியுடன் இசுலாமுதீனை கோவை மாநகர போலீசார் கைது செய்துள்ளனர்.

தற்போது கைது செய்யப்பட்டுள்ளவர் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த போலீசாரால் தேடப்படும் குற்றவாளி என்று அறிவிக்கப்படிருப்பதும், அவர் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரியவந்துள்ளது. 

இந்த கொள்ளை கும்பல் மீது டெல்லி, ஹரியான, உத்திரபிரதேசம், குஜராத், கர்நாடகா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் வழிப்பறி, வீடு புகுந்து கொள்ளையடித்தல் போன்ற 34-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது.

கொள்ளை வழக்கு ஒன்றிற்காக ஹரியானா மாநில மேவாத் மாவட்ட போலீசாரால் தனது கும்பலுடன் கடந்த கடந்த 2016-ம் இசுலாமுதீன் கைது செய்யப்படுள்ளார்.

தற்போது கோவை மாநகர போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...