நீலகிரியில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த காட்டெருமை உயிரிழப்பு

நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி அருகே உள்ள கப்பட்டி கிராமத்தில் தனியார் விடுதிக்கு சொந்தமான ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த காட்டெருமை பரிதாபமாக உயிரிழந்தது.

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி அருகே உள்ள கப்பட்டி கிராமத்தில் தனியார் விடுதிக்கு சொந்தமான ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த காட்டெருமை பரிதாபமாக உயிரிழந்தது.       



நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கப்பட்டி கிராமத்தில் தனியார் விடுதிக்கு சொந்தமான ஆழ்துளை கிணறு தோண்டப்பட்டுள்ளது. இதனை அந்த தனியார் விடுதி நிர்வாகம் மூடாமல் இருந்ததால் அப்பகுதியில் சுற்றி திரிந்த காட்டெருமை அந்த கிணற்றில் தவறி விழந்துள்ளது.



இதனையறிந்த அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து வன அதிகாரி கணேசன் தலைமையில் கிணற்றில் விழந்த காட்டெருமையை  காப்பற்ற பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும் அந்த காட்டெருமை உயிரிழந்தது. இது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும், இது போன்ற சம்பவங்கள் இப்பகுதியில் அதிகளவு நடைபெறுவதற்கு தனியார் விடுதிகள், அரசின் அனுமதி பெறாமல் இது போன்ற ஆழ்துளை கிணறுகள் வெட்டுதல், பாறைகள் உடைத்தல் போன்ற சட்ட விரேத செயல்களில் ஈடுபடுவதே காரணம் என்றும் இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...