நீலகிரியில் 500 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் பலி

நீலகிரி மாவட்டம் கேத்தி மலைபாதையில் ஐநூறு அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒட்டுனர் பலியானார். மேலும், 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

நீலகிரி : நீலகிரி மாவட்டம் கேத்தி மலைபாதையில் ஐநூறு அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒட்டுனர் பலியானார். மேலும், 2 பேர் படுகாயம் அடைந்தனர்.



உதகையை அடுத்துள்ள அண்ணாகாலனி பகுதியை சேர்ந்த சதிஷ், முத்து, சசி உள்ளிட்ட 3 பேர் மாலை 7 மணி அளவில் லாரியில் காய்கறியை ஏற்றிக் கொண்டு உதகையிலிருந்து மேட்டுப்பாளையம் சென்று கொண்டிருந்தனர். அப்போது, லாரியானது கேத்தி அருகே சென்ற போது கட்டுபாட்டை இழந்து 500 அடி பள்ளத்தில் கவிழ்ந்து அங்குள்ள வீட்டின் மீது விழுந்து விபத்துக்குள்ளானது. 



இதில், அந்த வீட்டில் இருந்தவர்கள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் லாரியில் சென்ற சதிஷ் மற்றும் முத்து ஆகியோரை பலத்த படுகாயங்களுடன் மீட்டு உதகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதல் உதவி சிகிச்சை அளிக்கபட்ட பின்னர் சதிஷ் மேல் சிகிச்சைக்காக கோவைக்கு அனுப்பி வைக்கபட்டார். இதனிடையே, இந்த விபத்தில் சிக்கிய மற்றொருவரின் நிலை என்ன என்று தெரியாததால் அவரை தேடும் பணி நள்ளிரவு வரை தொடர்ந்து நடைபெற்றது. இந்நிலையில் இன்று காலை சசிகுமார் உடல் சடலமாக மீட்கப்பட்டது இது குறித்து கேத்தி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...