வால்பாறையில் ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் தைப்பூசத் திருவிழா உற்சாகக் கொண்டாட்டம்

வால்பாறையில் ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் 13-ம் ஆண்டு தைப்பூச திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

கோவை : வால்பாறையில் ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் 13-ம் ஆண்டு தைப்பூச திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 



கோவிலில் தைப்பூசத் திருவிழாவின் துவக்க நாளான கடந்த 27-ம் தேதியன்று திருக்கொடியேற்றம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, மாலை 07.00 மணிக்கு சுவாமி புறப்பாடு நடைபெற்றது. 29-ம் தேதி காலை 06.00 சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. மாலை 4.30 மணிக்கு பிரதோஷ வழிபாட்டைத் தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு வால்பாறை வாழும் கலை குடும்பம் குழுவினரின் தெய்வீக இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று சிறப்பு அபிஷேகமும், ஆராதனையைத் தொடர்ந்து திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமியை வழிபட்டனர்.

அதைத்தொடர்ந்து இன்று நல்லகாத்து ஆற்றிலிருந்து புறப்பட்ட வால்பாறை முருகன் பக்தர்களின் அங்க அலகு பறவைக்காவடி மாபெரும் ஊர்வலம், நகரின் முக்கிய வீதிகளின் வழியாகச் சென்று ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி ஆலயத்தை அடைந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். இந்நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பறவை காவடி பக்தர்களுடன் ஊர்வலமாகச் சென்றனர். பின்னர், அன்னதானம் வழங்கப்பட்டது. 

அதைத்தொடர்ந்து, பல்வேறு பல்சுவை நிகழ்ச்சிகள், கலைநிகழ்ச்சிகளுடன் தைப்பூச திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இதில், வால்பாறையின் பல்வேறு எஸ்டேட் பகுதிகள் மற்றும் வெளியூரிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தைப்பூச திருவிழாவின் அனைத்து ஏற்பாடுகளையும் தைப்பூச விழாக்குழுவினர் மற்றும் கோயில் கமிட்டிகள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...