இந்திய ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர், வீராங்கனைகள் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் சிந்து, கிடாம்பி ஸ்ரீகாந்த், காஷ்யப் ஆகியோர் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

ஜனவரி 31




இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் சிந்து, கிடாம்பி ஸ்ரீகாந்த், காஷ்யப் ஆகியோர் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். 

இந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடர் டெல்லியில் இன்று தொடங்கி வருகிற 4-ந்தேதி வரை நடக்கிறது. இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்துவும், டென்மார்க்கின் நடால்யா கோச் ரோடேவும் மோதினர். இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய சிந்து முதல் சுற்றை 21-10 என எளிதாக கைப்பற்றினார். தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டையும் சிந்து 21-13 எனக் கைப்பற்றினார். இதன்மூலம், 21-10, 21-13 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்ற சிந்து இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

அதைத்தொடர்ந்து நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று போட்டியில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த்தும், ஹாங்காங்கின் லீ சியூக் இயூவும் மோதினர். இப்போட்டியின், முதல் இரண்டு செட்களையும் 21-17, 21-18 என்ற நேர் செட்களில் ஸ்ரீகாந்த் கைப்பற்றினார். இதன் மூலம் வெற்றி பெற்ற ஸ்ரீகாந்த் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். தொடர்ந்து நடைபெற்ற மற்றொரு ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீரரான காஷ்யப், டென்மார்க்கின் ஹான்ஸ்-கிரிஸ்டெய்ன் விட்டின்கசை எதிர்கொண்டார். இப்போட்டியில் 21-14, 21-18 என்ற நேர் செட்களில் காஷ்யப் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். 

இதுதவிர இந்திய வீராங்கனைகளாக சாய்னா நேவால், முக்தா அக்ரே, ஆகார்ஷி காஷ்யப், கட்டே ருத்விகா ஷிவானி மற்றும் இந்திய வீரர்களான சாய் பிரனீத், சித்தார்தா ஜெய்ஸ்வால் ஆகியோரும் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். 

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...