ஜல்லிக்கட்டு கலவரம் குறித்து மாநகர முன்னாள் காவல் ஆணையரிடம் விசாரணை மேற்கொள்ளப்படும்- நீதிபதி ராஜேஸ்வரன்


கோவை, ஜனவரி 31

கோவை மாநகர முன்னாள் காவல் ஆணையர் அமல்ராஜ் உள்ளிட்ட நால்வரிடம் ஜல்லிக்கட்டு கலவரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படும் என விசாரணை ஆணைய நீதிபதி ராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார்.



கடந்த ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு கலவரம் தொடர்பான விசாரணை ஆணையத்தின் தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், 'கோவையில் 3-வது முறையாக விசாரணை நடத்த தற்போது வந்துள்ளோம். 3 நாட்களில் 20 பேரிடம் விசாரணை நடத்தச் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 



இன்று 6 பேர் விசாரணைக்கு வந்துள்ளனர். 2 பேர் வரவில்லை. கோவையைப் பொறுத்தவரை கடந்த ஆகஸ்ட் மாதம் 15 பேரிடமும், நவம்பர் மாதம் 8 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. சென்னையில் 960-யில் 47 பேரிடமும் மதுரையில் 888-யில் 132 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. வரும் மார்ச் முதல் வாரம் மற்றும் கடைசி வாரம் விசாரணை நடத்தப்படும்.



ஒருவரிடம் விசாரணை மேற்கொள்ள 20 நிமிடம் ஆகும். வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை மேற்கொள்வதால் கால தாமதமாகிறது. கோவையைப் பொறுத்தவரை போலீஸ் ஆதரவாளர்கள் 21 பேரிடமும், போலீசார் 7 பேரிடமும், பொதுமக்கள் 14 பேரிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது. நாளை முன்னாள் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ், 2 உதவி ஆணையர்கள், 1 துணை ஆணையர் ஆகியோர் விசாரணை ஆணையத்தின் முன்பு ஆஜராக உள்ளனர். ஓர் ஆண்டுக்குள் விசாரணையை முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...