ஸ்மார்ட் சிட்டி தொடர்பான குறிப்பாணை மத்திய அமைச்சரிடம் ஒப்படைப்பு

கோவை மாவட்டத்தை ஸ்மார்ட் சிட்டியாக தரம் உயர்த்துவது தொடர்பான குறிப்பாணையை மத்திய அமைச்சரிடம் தமிழக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வழங்கினார்.

கோவை : கோவை மாவட்டத்தை ஸ்மார்ட் சிட்டியாக தரம் உயர்த்துவது தொடர்பான குறிப்பாணையை மத்திய அமைச்சரிடம் தமிழக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வழங்கினார். 



மத்திய வீடு மற்றும் ஊரக மேம்பாட்டுத் திட்ட அமைச்சர் ஹர்தீப் சிங்கை, தமிழக மாநகராட்சி நிர்வாகம்,  கிராம மேம்பாடு மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கான அமைச்சர் எஸ்.பி. வேலுச்சாமி டெல்லியில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, தமிழகத்தில் மேற்கொள்ளவிருக்கும் ஸ்மார்ட் சிட்டி நடவடிக்கைகள் குறித்து அவரிடம் ஆலோசனை நடத்தினர். அப்போது, ஸ்மார்ட் சிட்டி தொடர்பான குறிப்பாணையை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, மத்திய அமைச்சரிடம் வழங்கினார். 



அந்தக் குறிப்பாணையில், நாட்டில் அதிக நகரங்கள் உள்ள மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. நகர்ப்புறங்களில் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நகர்ப்புற உள்ளூர் நிறுவனங்களின் உதவியுடன் தண்ணீர் வசதி, நிலத்தடி கழிவுநீர், சாலை மற்றும் பல்வேறு வசதிகள் பொதுமக்களுக்காக ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் 12 நகராட்சிகளும், 124 மாநகராட்சிகளும், 528 டவுன் பஞ்சாயத்துகளும் உள்ளன. இதில், நாடு முழுவதும் தேர்வு செய்யப்பட்ட ஸ்மார்ட் சிட்டிகளாக தரம் உயர்த்தப்பட உள்ள நகர் பட்டியலில், தமிழகத்தின் 12 நகராட்சிகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் எனது சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. 

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...