காயம்பட்ட கன்றுவை ஏற்றிச்சென்ற வாகனத்தைப் பின்தொடர்ந்த பசுவின் பாசப்போராட்டம்

கர்நாடகாவில் காயம்பட்ட கன்றுவை ஏற்றிச்சென்ற வாகனத்தை விரட்டிய தாய் பசுவின் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி உள்ளது.


கர்நாடகா: கர்நாடகாவில் காயம்பட்ட கன்றுவை ஏற்றிச்சென்ற வாகனத்தை விரட்டிய தாய் பசுவின் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி உள்ளது. 



வடக்கு கர்நாடக மாநிலத்தில் ஹவேரி என்ற ஊரில் வசிக்கும் விவசாயி ஒருவர் தனது பசுமாட்டை செல்லமாக வளர்த்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு அந்த பசு, கன்று போட்டது. சமீபத்தில் கன்று விளையாடும்போது கீழே விழுந்து காயம்பட்டது. அதனால், கன்றுவால் எழுந்து நடக்க முடியவில்லை. கன்றுவின் வேதனையை விவசாயி மட்டுமல்ல தாய் பசுவும் பார்த்து துடித்தது. இதையடுத்து, விவசாயி கன்றுக்குட்டியை ஒரு மினி வேனில் ஏற்றிக் கொண்டு அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். 

இதைப்பார்த்த தாய் பசுவும் வேனை பின் தொடர்ந்து ஓடியது. லாரி வேகமாக சென்றபோது பசுவும் வேகமாக ஓடியது. அரை கிலோ மீட்டர் தொலைவிற்கு மருத்துவமனை வரை  கூடவே சென்றது. இந்தக் காட்சியை சாலையில் சென்ற அனைவரும் பார்த்து நெகிழ்ந்துபோனார்கள். தாயின் இந்தப் பாசப்போராட்டம் வீடியோ காட்சியாக சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...