அமைச்சர்களின் இலாபத்திற்காகவே பேருந்து கட்டணம் உயர்வு : ஆதாரம் இருப்பதாக முன்னாள் அமைச்சர் பேட்டி

ஆயிரம் பேருந்து வழித்தடங்களை முக்கிய அமைச்சர்கள் வாங்கிய பிறகே பேருந்து கட்டணத்தை அரசு உயர்த்தியுள்ளதாக முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார்.


கோவை : ஆயிரம் பேருந்து வழித்தடங்களை முக்கிய அமைச்சர்கள் வாங்கிய பிறகே பேருந்து கட்டணத்தை அரசு உயர்த்தியுள்ளதாக முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார். 

கோவை வடவள்ளி அருகே டிடிவி தினகரனின் கட்சி ஆலோசனை கூட்டத்திற்கு முன்பாக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசுகையில், பேருந்து கட்டண குறைப்பு கண் துடைப்பு மட்டுமே. போக்குவரத்து துறை பொதுமக்களுக்கு சேவையாற்றக்கூடிய துறையே தவிர வருமானம் அடிப்படையில் இதைப் பார்க்கக்கூடாது. ஜெயலலிதா அரசாக இருந்திருந்தால் பேருந்து கட்டண உயர்வை உடனடியாக திரும்பப்பெற்று இருப்பார்கள். போக்குவரத்தில் ஏற்படும் நிதிப் பற்றாக்குறையை அரசுதான் வழங்க வேண்டும். 

 

சேலத்திலிருந்து கோவைக்கு சுமார் 1,000 பேருந்து வழித்தடங்களை ஒருசில முக்கிய அமைச்சர்கள் வாங்கிய பிறகுதான் பேருந்து கட்டண உயர்வு என்பது உண்மைதான். இது குறித்து எங்களிடமே பல தனியார் பேருந்து உரிமையாளர்கள் கூறியுள்ளனர். 

 

பிப்ரவரி இறுதிக்குள் "கூவத்தூர் பழனிச்சாமி" அரசு வீட்டுக்கு அனுப்பப்படும். அ.தி.மு.க.,விலிருந்து நிர்வாகிகளை நீக்குவது சட்டப்படி குற்றம். மத்திய அரசிடம் தற்போதைய தமிழக அரசு நிர்வாகத்தை அடமானம் வைத்துள்ளது. மத்திய அரசின் அதிகாரத்தைப் பயன்படுத்தி குறுக்கு வழியில் பெற்ற அ.தி.மு.க., சின்னத்தையும், கட்சியையும் நீதிமன்றம் மூலம் மீண்டும் பெறுவோம். அ.தி.மு.க.,வின் நிரந்தர பொதுச்செயலாளர் சசிகலா தான், துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தான். என்றார். 

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...