”பறவைகளை கண்டு ரசிப்பது உடல்நலத்தை ஆரோக்கியமாக்கும்”

பறவைகளை கண்டு ரசிக்கும் இளைஞர்களின் உடல்நலம் நல்ல ஆரோக்கித்துடன் வாழ வகை செய்யும் என அமெரிக்க பறவைகள் ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

கோவை : பறவைகளை கண்டு ரசிக்கும் இளைஞர்களின் உடல்நலம் நல்ல ஆரோக்கித்துடன் வாழ வகை செய்யும் என அமெரிக்க பறவைகள் ஆய்வாளர் தெரிவித்துள்ளார். 



கோவையில் எச்.எஸ்.பி.சி.யின் 7-வது பறவைகளுக்கான பந்தயம் நடைபெற்றது. இதில், அமெரிக்காவின் தேசிய பறவைகள் சங்கத்தைச் சேர்ந்த ரிச்சர்ட் பெர்ன்ஸ்டீன் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது, கோவை மற்றும் வெளிநாடுகளில் பறவைகள் பார்வையாளர்கள் குறித்து ரிச்சர்ட் பேசுகையில், அமெரிக்காவில் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் முதியவர்களை மட்டுமே காண முடிகிறது. ஆனால், கோவையில், அதிகப்படியான போட்டியாளர்கள் இளைஞர்கள். இது அவர்களை ஆரோக்கியமாக வைக்க உதவும். என்றார். 



மேலும், அமெரிக்காவில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக கிறிஸ்துமஸ் பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்று வருவதாக அவர் கூறினார். 

இதேபோல, இந்திய பறவைகள் பந்தயம் சங்கத்தைச் சேர்ந்த சஞ்சய் மோங்கா கூறுகையில், கடந்த 15 நகரங்களில் நடைபெற்ற இதுபோன்ற நிகழ்ச்சிகளில் சுமார் 3,000 -க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில், பறவைகள் பார்வையாளர்கள் முக்கிய அம்சமாக உள்ளனர். இவ்வாறு கூறினார். 

சலிம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாறு மையத்தின் அறிவியலாளர் பி. பிரமோத் கூறுகையில், கடந்த 6 பறவைகளுக்கான போட்டியின் அடிப்படையில் சேகரிக்கப்பட்ட ஆவணங்களின் மூலம்  புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது. என்றார். 

கோவையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 25 அணிகள் கலந்துகொண்டன. ஐரோப்பிய பீ ஈட்டர், டெமினிக் ஸ்டிண்ட் உள்ளிட்ட பல்வேறு வகையான பறவைகள் பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தளித்தன. 

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...