சட்ட விரோத மது விற்பனையை தடுக்கக் கோரி கருமத்தம்பட்டி மக்கள் ஆட்சியரிடம் மனு

கருமத்தம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதைத் தடுக்கக்கோரி, அப்பகுதி பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

கோவை, ஜனவரி 29

கருமத்தம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதைத் தடுக்கக்கோரி, அப்பகுதி பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.



கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி அருகே வாகராயம் பாளையம் பகுதியில் இயங்கிவரும் டாஸ்மாக் கடையினால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, இந்த மதுபானக்கடையினை அகற்றக் கோரியும், அப்பகுதியில் சாலையோர உணவு விடுதிகள், பள்ளி, குடியிருப்புகள் பகுதிகளில் சட்ட விரோதமாக நடைபெற்று வரும் மது விற்பனையைத் தடுக்க வலியுறுத்தியும் அப்பகுதி பெண்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

அம்மனுவில், சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெற்று வருவதால் சிறு வயது மாணவர்களும் கூட அதிகளவில் குடிப் பழக்கத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும், இப்பகுதியில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் பயன்பாடும் அதிகரித்து வருகிறது. 

மாவட்ட நிர்வாகம் இதுகுறித்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள தவறும்பட்சத்தில் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம் என அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...