பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுற்றுலா மற்றும் வாகன ஓட்டுநர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை மாவட்ட சுற்றுலா மற்றும் வாகன ஓட்டுநர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் இன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.

கோவை, ஜனவரி 29

கோவை மாவட்ட சுற்றுலா மற்றும் வாகன ஓட்டுநர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் இன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.



அம்மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:- மத்திய, மாநில அரசுகளால் சுமத்தப்படும் நடைமுறைக்குச் சாத்தியமற்ற சட்டங்களால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், அதிகாரிகளும் தங்கள் மீது உள்நோக்கத்துடன் இடையூறு செய்து வருகின்றனர். 

நாளுக்கு நாள் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை காரணமாக தொழில் செய்ய முடியாமல் குடும்பங்கள் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதனிடையே, நாள் ஒன்றுக்கு 8 மணி நேரம் மட்டுமே வேலை, வாரத்திற்கு 48 மணி நேரம் பணி என்ற சட்டத்திருத்தத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும். வாகன சோதனையின் போது அசல் ஓட்டுநர் உரிமத்தைப் பறித்து வைத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். சுற்றுலா வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 கோரிக்கைகள் அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், இந்த கோரிக்கைகள் அடங்கிய மனுவை தமிழக முதலமைச்சர், அரசு போக்குவரத்துத் துறை முதன்மை செயலாளர் மற்றும் போக்குவரத்து ஆணையருக்கு அனுப்ப உள்ளதாகவும் ஓட்டுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...