ராட்சத மரம் விழுந்ததால் உதகை மலை ரயில் சேவை பாதிப்பு

நீலகிரி மாவட்டம் உதகையை அடுத்துள்ள லவ்டேல் பகுதியில் ராட்சத மரம் விழுந்ததால் மலை ரயில் சேவை மற்றும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி, ஜனவரி 29

நீலகிரி மாவட்டம் உதகையை அடுத்துள்ள லவ்டேல் பகுதியில் ராட்சத மரம் விழுந்ததால் மலை ரயில் சேவை மற்றும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 



உதகை அருகே லவ்டேல் சந்திப்பில் இன்று அதிகாலை 5 மணியளவில் ராட்சத மரம் ஒன்று விழுந்தது. இந்த மரமானது உதகை மற்றும் குந்தா செல்லும் பிரதான சாலையிலும் மலை ரயில் பாதையிலும் இடையூறு ஏற்படுத்தும் விதமாக விழுந்தது. இது குறித்து தகவல் அறிந்து தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

ராட்சத கிரேன் மற்றும் ஜேசிபி இயந்திரம் மூலம் சுமார் 6 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மரம் அகற்றப்பட்டது. இதனால், உதகை மற்றும் குந்தா முக்கிய சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும், மலை ரயில் பாதையில் மரம் விழுந்ததால் மலை ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.



Newsletter

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...