நம்ம கோவை ஜல்லிக்கட்டு 2018: சிறந்த மாடுபிடி வீரருக்கு மாருதி கார் பரிசு

கோவையில் நடைபெற்ற 'நம்ம கோவை ஜல்லிக்கட்டு 2018' போட்டியில் சிறப்பாக மாடுபிடித்த மேட்டுப்பட்டியைச் சேர்ந்த கார்த்திக் என்பவருக்கு மாருதி கார் பரிசாக வழங்கப்பட்டது.

கோவை, ஜனவரி 28

கோவையில் நடைபெற்ற 'நம்ம கோவை ஜல்லிக்கட்டு 2018' போட்டியில் சிறப்பாக மாடுபிடித்த மேட்டுப்பட்டியைச் சேர்ந்த கார்த்திக் என்பவருக்கு மாருதி கார் பரிசாக வழங்கப்பட்டது.

கோவை செட்டிபாளையம் பகுதியில் கோவை மாவட்ட நிர்வாகமும், தனியார் அமைப்பும் இணைந்து இன்று ஜல்லிக்கட்டு போட்டியினை நடத்தியது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியினை நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவங்கி வைத்தார்.

இந்த ஜல்லிக்கட்டு துவக்க நிகழ்ச்சியில் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகரன் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

இப்போட்டியில், சரவணம்பட்டி கரிவரதராஜ கோவில் காளை முதலில் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டது. இதனைத்தொடர்ந்து, போட்டிக்காகத் தென்மாவட்டங்களில் இருந்து வந்திருந்த 500-க்கும் மேற்பட்ட காளைகள் ஒன்றின் பின் ஒன்றாக வெளியில் விடப்பட்டன. இதனை 600-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் எதிர்த்து நின்று அடக்கியது அங்கு கூடியிருந்தோரை வெகுவாகக் கவர்ந்தது.

இப்போட்டியின் இறுதியில் சிறந்த மாடுபிடி வீரர் மற்றும் சிறந்த மாட்டின் உரிமையாளர்களுக்க பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், சிறந்த மாடுபிடி வீரராக முதல் பரிசை மேட்டுப்பட்டியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் தட்டிச் சென்றார். அவருக்கு மாருதி கார் பரிசாக வழங்கப்பட்டது. தொடர்ந்து, இரண்டாம் இடம் பிடித்த மட்டப்பாறையைச் சேர்ந்த கோடி-க்கு ஹீரோ இருசக்கர வாகனமும், மூன்றாம் இடம் பிடித்த காட்டூர் கார்த்திக்கு டிவிஎஸ் எக்ஸ்எல் வாகனமும் பரிசாக வழங்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, சிறந்த மாட்டின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவைத் தலைவர் டி.ராஜசேகரின் மாடு சிறந்த மாடாகத் தேர்வு செய்யப்பட்டு மாருதி கார் பரிசாக வழங்கப்பட்டது. தொடர்ந்து, திருச்சியைச் சேர்ந்த சிவா மற்றும் முத்துராமன் ஆகியோரின் மாடுகள் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தைப்பிடித்து ஹீரோ இருசக்கர வாகனம், டிவிஎஸ் எக்ஸ்எல் வாகனம் பரிசாக வழங்கப்பட்டது.

மேலும், இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்ற அனைத்து வீரர்களுக்கும் தங்க காசு, கட்டில், பீரோ மற்றும் பாத்திரங்கள் வழங்கப்பட்டன.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...